மதிமுக எம்பி வைகோ மருத்துவமனையில் அனுமதி.. மதுரை அப்போலோவில் உடல் பரிசோதனை!
மதுரை: மதிமுக எம்பி வைகோ மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தற்போது அரசியலில் மிகவும் தீவிரமாக செயலாற்றிக்கொண்டு இருக்கிறார். தமிழக அரசியலில் மட்டுமின்றி தேசிய அளவிலும் இவர் அதிகம் கவனம் பெற்றுள்ளார்.
ராஜ்ய சபா எம்பி ஆன பின் இவர் நாடு முழுக்க கவனம் பெற்றுள்ளார். முக்கியமாக காஷ்மீர் பிரச்சனையில் இவர் பேசியது டெல்லி அரசியலையே குலுக்கியது குறிப்பிடத்தக்கது.
அரசியலில் மீண்டும் ஆக்ட்டிவாக இருப்பதாலும் நிறைய வழக்குகளில் ஆஜராகி வாதிடுவதாலும், பொது விழாக்களில் கலந்து கொள்வதாலும் இவரின் உடல்நிலை லேசாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து நிறைய இடங்களுக்கு செல்வதால், ஓய்வு இன்றி இவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இதையடுத்து தற்போது மதிமுக எம்பி வைகோ மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.உடல் பரிசோதனைக்காக எம்பி வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
உடலில் ஏற்பட்டு இருக்கும் சிறு சிறு பிரச்சனைகளை சரி செய்வதற்கும், ஆலோசனைகளை பெறுவதற்கும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.