தனக்கு தானே விஷ ஊசி போட்டு மாணவர் தற்கொலை.. இதுக்குதான் டாக்டருக்கு படிச்சியா.. கதறிய பெற்றோர்
விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்
Recommended Video
மதுரை: மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவர் தனக்கு தானே விஷ ஊசி போட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தை சேர்ந்தவர் உதயராஜ். இவர் மதுரை மருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு மயக்கவியல் துறையில் படித்து வருகின்றார். வயது 29 ஆகிறது.
மதுரை முனிசிபல் காலனியில் இருக்கும் விஜயகுமார் என்பவரது வீட்டில் தன்னுடைய நண்பர் ராஜேஷ் என்பவர் உடன் தங்கி படித்து வந்துள்ளார்.
சாட்டையை கையில் எடுத்த ஹைகோர்ட்.. பீச் ரோட்டில் உள்ள அதிமுக பேனர்களை அகற்ற அதிரடி ஆணை!
அறைக்கதவு
நேற்று இரவு வழக்கம்போல் காலேஜ் போய்விட்டு வீட்டுக்கு வந்தார். இரவில், தன்னுடைய நண்பர் வேலைக்கு சென்று விட்டதால் தனியாகத்தான் இருந்தார். இந்நிலையில், இன்று காலை வெகு நேரமாகியும் அவர் வீட்டு கதவு அறை திறக்கப்படவேயில்லை.
ஊசி
இதனால் சந்தேகம் அடைந்த வீட்டு ஓனர், போலீசாருக்கு தகவல் தந்தார். விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, உதயராஜ் பிணமாக விழுந்து கிடந்தார். அவருக்கு பக்கத்தில், அருகே ஊசி, மருந்துகள் சிதறி கிடந்தன. மேலும் கைப்பட எழுதிய ஒரு கடிதமும் இருந்தது.
பணிச்சுமை
அதில், அதிக பணிச்சுமை காரணமாக தற்கொலை முடிவை மேற்கொள்வதாக எழுதப்பட்டுள்ளது.இதையடுத்து மாணவரின் உடலை போலீசார் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர். உதயராஜ் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்து 3 மாதங்கள்தான் ஆகின்றதாம். அதனால் அவரது இறப்பு பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விஷ ஊசி
"இதுக்குதான் டாக்டருக்கு படிச்சியா" என்று அவர்கள் கதறி அழுதது மனதை உருக்கிவிட்டது. மயக்கவியல் துறை என்பதால் பெரும்பாலும் எல்லா ஆபரேஷன்களிலும் இவர்கள் கூடவே இருக்கும்சூழல் உள்ளது. இது மனரீதியான பாதிப்பு, உளைச்சலுக்கும் ஆளாகும் என்பது பொதுவான இயல்பு. இதில், உதயராஜுக்கு மன உளைச்சல் அதிகமாகவே இருந்திப்பதாக தெரிகிறது. அதனால்தான் விஷஊசி போட்டுக் கொண்டு தற்கொலை வரை சென்றுள்ளதாக கூறப்படுகிறது.