ஸ்டாலின் வேல் குத்தி கூட ஆடுவார்...செல்லூர் ராஜூ கிண்டல்
மதுரை : தேர்தல் வந்தால் ஸ்டாலின் வேல் குத்திக் கொண்டு கூட ஆடுவார் என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். நேற்று, ஸ்டாலினுக்கு அம்னீசியா என கூறிய அமைச்சர், இன்று மீண்டும் ஸ்டாலினை தாக்கி பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டியில், தேர்தல் வந்து விட்டதால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேல் வாங்குவது மட்டும் அல்ல , வேல் குத்தி ஆடக் கூட செய்வார். அம்மனுக்கு தீ கூட மிதிப்பார். தேர்தல் முடிந்த பிறகு பகுத்தறிவு பேசுவார்.
பசும் பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் வழங்கிய விபூதியை வாங்கி கீழே கொட்டியவர் எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின். குங்குமம் கொடுத்தா அழிப்பது , விபூதி கொடுத்தால் தூக்கி எறிவது , இது போன்ற செயலை மக்களும் கடவுளும் ஏற்க மாட்டார்கள். கபட வேடதாரி , அவர் ஒரு நாளும் முதல்வராக முடியாது என்றார்.
கூட்டணியில் உள்ள பிரேமலதா விஜயகாந்த் பேசுயது குறித்து கேட்டதற்கு, அவர்கள் சொந்த கருத்தை கூறுகிறார். கூட்டணியில் உள்ளவர்களை இப்படி பேசுங்கள் என கூற முடியாது.
தை பூசத்திற்கு விடுமுறை அறிவித்துள்ளது, அனைத்து மதத்தினருக்கு தேவையான நலத்திட்டங்கள் செய்து வருவதால் கடவுள் அதிமுக பக்கம் தான் இருப்பார். 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் வெல்லும். மீண்டும்
அதிமுக ஆட்சியை பிடித்து, எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவார் என கூறினார்.