மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மக்களின் நம்பிக்கை நாயகர் முதல்வர்... எதிர்க்கட்சித் தலைவரின் பணிகள் பூஜ்யம் - ஆர்.பி.உதயகுமார்

Google Oneindia Tamil News

மதுரை: தமிழக மக்களின் நம்பிக்கை நாயகராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்பாடுகளை பற்றி மதிப்பிட்டால் பூஜ்யம் தான் உள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். திமுகவின் தேர்தல் பணிகளை முடக்கவே இ-பாஸ் முறை நீட்டிக்கப்படுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் நேற்று பரபரப்பு குற்றஞ்சாட்டிய நிலையில் அமைச்சர் உதயகுமார் மறுத்துள்ளார்.

minister udhayakumar says, peoples Hope Man chief minister edappadi palanisami

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்குள் தான் இருந்து வருவதாகவும், திமுக எந்தப் பணியையும் செய்யாத போது அரசு எப்படி அவர்களின் பணியை தடுக்க முடியும் எனவும் அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பினார். மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து பல மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தியுள்ளதாகவும், காணொலி மூலம் ஆய்வு நடத்தியதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதி மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதி

இதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்த பணிகள் என்ன என அவர் வினவினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணியையும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பணியையும் ஒப்பிட்டு பார்த்தால் ஸ்டாலின் செயல்பாடுகள் பூஜ்யத்தில் இருப்பதாக அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார். மேலும், தமிழக மக்களின் நம்பிக்கை நாயகராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார் என அவர் கூறியுள்ளார்.

English summary
minister udhayakumar says, people's Hope Man chief minister edappadi palanisami
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X