யார் வெற்றி பெற வேண்டும்... திமுகவினரை அதிரவைத்த மு.க.அழகிரியின் பேட்டி
Recommended Video
மதுரை: யார் வெற்றி பெற வேண்டும் என மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி வாக்களித்த பின் பேட்டி அளித்துள்ளார்.
தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சியை தீர்மானிக்கும் வகையில் இன்று மக்களவை தேர்தலும், சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்து வருகிறது.
இந்த தேர்தலில் காலை 7 மணியில் இருந்தே தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது சொந்த ஊரில் வாக்களித்து வருகிறார்கள். மதுரை ஆயிர வைசியர் பள்ளி வாக்குச்சாவடியில் மதுரை ஆதீனம் வாக்களித்தார். இதேபோல் அமைச்சர் செல்லுர் ராஜு தனது குடும்பத்தினருடன் மதுரை மீனாட்சி பெண்கள் கல்லூரியில் வாக்களித்தார்.
பளிச் புன்னகை.. வீட்டிலிருந்து பூத்துக்கு நடந்தே வந்து.. கியூவில் நின்று ஓட்டுப் போட்ட முதல்வர்!
அந்த வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, யார் வெற்றி பெற வேண்டும் என மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.
முன்பெல்லாம் தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்தால் அழகிரி, திமுகவே வெற்றி பெறும் என்றும், மக்கள் திமுகவின் பக்கமே நிற்பார்கள் என்றும் கூறுவார். ஆனால் ஸ்டாலினுடனான அதிகாரப்போட்டியால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் மு.க.அழகிரி, இப்போது அளித்த பேட்டியில், யார் வெற்றி பெற வேண்டும் என மக்களே தீர்மானிப்பார்கள் என பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு சென்றுள்ளதை கேட்டு திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.