யார் இருந்தால் அசைக்க முடியாது என்று அழகிரி சொன்னாரோ அந்த ஆதரவாளர் வெட்டிக்கொலை.. மதுரையில் பதற்றம்
Recommended Video
மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு அருகே முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆதரவாளர் மதுரை வீரன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை வீரன் தன்னுடன் இருந்தால் யாராலும் தன்னை அசைக்க முடியாது என்று சமீபத்தில்தான் பேசியிருந்தார், மு.க.அழகிரி. இப்படியான நெருக்கம் கொண்ட ஆதரவாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அழகிரி ஆதரவாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[இதெல்லாம் பிள்ளைங்களா.. பற்றிக் கொண்டு வருகிறது இந்த வீடியோவை பார்த்தால்!]
தீவிர ஆதரவாளர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பாலமேடு அருகே சத்திரவெள்ளாளபட்டி கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைர் மதுரை வீரன். இவர் மு.க. அழகிரி ஆதரவாளராக வலம் வந்தவர். அழகிரி திமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகும்கூட, மதுரைவீரன் தொடர்ச்சியாக அவரது ஆதரவாளராகவே இருந்து வந்தார்.
அழகிரி பேச்சு
2 மாதங்களுக்கு அழகிரி தலைமையில் மதுரை வீரன், மகளுக்கு திருமணம் நடைபெற்றது. "மதுரை வீரன் போன்றவர்கள் என்னுடன் இருக்கும்போது, என்னை யாரும் அசைக்க முடியாது" என்று அந்த திருமண விழாவில், அழகிரி பேசியிருந்தார்.
வெட்டிக் கொலை
இந்த நிலையில், இன்று காலை, மதுரை வீரன் அவர் வீட்டின் அருகே, வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. அலங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்ன காரணம்
மதுரை வீரன் கொலை செய்யப்பட்டது, அழகிரிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. அரசியல் பிரச்சினையால் இந்த கொலை நடந்ததா என்ற கேள்வியும் அழகிரி ஆதரவாளர்கள் இடையே எழுந்துள்ளது.