மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதுவரை 20 கோடிக்கும் மேலான நகைகள், கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்… மதுரையில் அதிரடி

Google Oneindia Tamil News

Recommended Video

    இதுவரை 20 கோடிக்கும் மேலான நகைகள், கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்-வீடியோ

    மதுரை: மதுரை மாவட்டத்தில் இதுநாள் வரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 20 கோடிக்கும் மேலான நகைகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்

    நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்னர், மார்ச் 11 ஆம் தேதி முதல் இன்று வரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 20 கோடிக்கும் மேலாக நகைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

     Money, Gold seizure in Madurai: Flying Force Action

    மதுரை மாவட்டத்தில் வாகன தணிக்கை செய்ய 70 பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனைகள் நடைபெறுகிறது.

    இந்நிலையில், இன்று காலை தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் திருச்சி ஆக்ஸிஸ் வங்கியில் இருந்து மதுரை கனரா வங்கிக்கு வாகனத்தில் எடுத்து வந்த 4 கோடியே 50 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

     Money, Gold seizure in Madurai: Flying Force Action

    முதல் கட்ட விசாரணையில் பணம் எடுத்து வர அனுமதிக்கப்பட்ட ஆவணங்களில் முறையான தகவல்கள் இல்லை என தெரிய வந்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடராஜன் விசாரணை செய்து வருகிறார்.

    English summary
    More than 20 Crores Money, Gold seizure in Madurai: Flying Force Action
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X