இரு பெண் குழந்தைகளை எரித்து தாய் தற்கொலை.. மதுரையில் சோகம்
மதுரை: மதுரையில் குடும்பத் தகராறில் இரு பெண் குழந்தை எரித்துக் கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேவுள்ள மேலவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு வரணிஸ்ரீ (4), வர்ணிகாஸ்ரீ (2) ஆகிய இரு பெண் குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த தமிழ்ச் செல்வி தனது இரு குழந்தைகளுக்கு தீவைத்து விட்டு தானும் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கேரளாவில் கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுப்பு...வயிற்றிலேயே இரட்டை குழந்தைகள் இறந்த சோகம்!!
இதில் பலத்த காயமடைந்த இரு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் தமிழ்ச் செல்வி மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.