உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி... மதுரை மாவட்ட புதிய ஆட்சியராக ச.நாகராஜன் பொறுப்பேற்றார்
மதுரை: மதுரை மாவட்ட புதிய ஆட்சியராக ச.நாகராஜன் பொறுப்பேற்றார். பொது சுகாதாரம் மற்றும் நலத்துறையின் கூடுதல் இயக்குநராக இருந்தவர்.
சில தினங்களுக்கு முன்பு, மதுரை வாக்குப் பதிவு மையத்திற்குள் வட்டாட்சியர் சம்பூர்ணம் நுழைந்த சம்பவம் அறிந்த திமுக, அமமுக உள்ளிட்ட கட்சியினர் தர்ணா போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, வட்டாட்சியர் சம்பூரணம் உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் தொடர்ந்த வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியரும் ,தேர்தல் அதிகாரியுமான நடராஜனை மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தேர்தல் அதிகாரி, காவல்துறை அதிகாரிகளையும் மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணைய நடைமுறைகளில் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
வட்டாட்சியர் சம்பூர்ணத்தை மையத்திற்குள் செல்ல அனுமதித்த, உதவி போலீஸ் ஆணையர், ஆட்சியரின் தனி அதிகாரி, பணியில் இருந்த காவல் அதிகாரிகள் மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவங்க 3 பேருக்கு இடையில்தான் பிரதமர் பதவிக்கு ரேஸ்.. சரத்பவார் கணிப்பு..யாரை சொல்கிறார் தெரியுமா?
தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்குப் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி, மதுரை மாவட்ட புதிய ஆட்சியராக ச.நாகராஜன் பொறுப்பேற்றுள்ளார். பொது சுகாதாரம் மற்றும் நலத்துறையின் கூடுதல் இயக்குநராக இருந்தவர்.