வாங்கினீங்களாம்மா.. ஏம்மா, தங்கச்சி.. பார்க்க பாவமா இல்லையாம்மா.. அதிர வைத்த ஓபிஎஸ்!
திருப்பரங்குன்றம் வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து ஓபிஎஸ் பிரச்சாரம் செய்தார்.
Recommended Video
திருப்பரங்குன்றம்: "அம்மா, தங்கச்சி எவ்வளவு கஷ்டப்பட்டு பேசிகிட்டு இருக்கேன். பாருங்க, என்னை பார்க்க உங்களுக்கு பாவமா தெரியலையா, பாருங்கம்மா" என்று ஓபிஎஸ் திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தில் பேசியது திகைப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவித்ததில் இருந்தே ஒரே எதிர்பார்ப்புதான்! ஏனெனில் ஏற்கனவே லிஸ்ட்டில் இருந்த பெரிய பெரிய ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி வேட்பாளராக செலக்ட் ஆனவர் முனியாண்டிதான்!
யார் இந்த முனியாண்டி, இவருக்கு ஏன் சீட் தந்திருக்கிறார்கள் என்பது இதுவரை நமக்கு தெரியவில்லை. ஆனால் சில தினங்களுக்கு முன்பு வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், முனியாண்டியை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளிவிட்டார்.
பாசம் + கூட்டணி தர்மம்.. அரவக்குறிச்சியில் பட்டையை கிளப்பும் ஜோதிமணி.. திமுகவினரே வியக்கிறார்கள்!
பால் வடியிற முகம்
"நாம் ஒரு தொண்டரைத்தான் வேட்பாளராக நிறுத்தி இருக்கிறோம். இயக்கத்துக்காக உழைத்த தொண்டர். ரொம்ப அப்ராணி. பார்க்கவே ரொம்ப சாது.. பால் வடிகிற முகம். பகுதி கழக செயலாளராக இருந்து பல பொறுப்புகளை வகித்தவர்" என்றார். அப்போதே முனியாண்டி மீது அதிமுக தொண்டர்களுக்கு ஆர்வம் கூடிவிட்டது. இப்போது திருப்பரங்குன்றத்தில் பிரச்சாரம் செய்தபோதும் முனியாண்டியை புகழ்ந்துள்ளார் ஓபிஸ்.
மிக்சி, கிரைண்டர்
அப்போது ஓபிஎஸ் பேசியபோது,"இல்லத்தரசிகளுக்கு மிக்சி, கிரைண்டர் வழங்குவதாக சொல்லி, சொன்னபடியே அம்மா தந்தாங்க.. (நீங்க எல்லாரும் வாங்கிட்டீங்களாம்மா என்று கூட்டத்தில் நின்றிருந்த பெண்களை கேட்டார் ஓபிஎஸ்)
வாங்கினீங்களா?
முன்னெல்லாம் அண்ணன்மார்கள் ஸ்கூட்டி ஓட்ட, பின்சீட்டுல தங்கச்சிமார்கள் உட்கார்ந்துகொண்டு போனார்கள். இப்போ அப்படி இல்லை.. இலவச ஸ்கூட்டி தரப்படுகிறது. தங்கச்சிமார்கள் ஸ்கூட்டி ஓட்ட.. பாவம் அண்ணன்மார்கள்தான் பின்னாடி உட்கார்ந்துட்டு போறாங்க. இதுதான் பெரியார் கண்ட ஜனநாயக சோஷலிஸம்! பொங்கலுக்கு வெல்லம், பச்சரிசி, நெய், முந்திரி பருப்புடன் இப்போ 1000 ரூபாயும் சேர்த்து தர்றோம். (வாங்கினீங்களாம்மா.. ஒரு வார்த்தைகூட சொல்ல மாட்டேங்கிறீங்களே என்று கேட்டுவிட்டு சிரிக்கிறார்)
நல்ல மனுஷன்
திருப்பரங்குன்றம் வேட்பாளர் முனியாண்டி இருக்காரே.. நல்ல மனுஷங்க இவர். கூப்பிட்ட குரலுக்கு வந்து நிப்பாரு. இவர் ஏதாவது கட்டப்பஞ்சாயத்துக்கு போய் இருக்காரா? எதுவும் கிடையாது. பால் வடியிற முகம். இவர் தொண்டரோடு தொண்டராக வாழ்ந்து கொண்டிருப்பவர்" என்று சொன்னபோது, மக்கள் கலைய ஆரம்பித்தனர்.
கெஞ்சல் பேச்சு
உடனே ஓபிஎஸ், "அம்மா, தங்கச்சி எவ்வளவு கஷ்டப்பட்டு பேசிகிட்டு இருக்கேன். பாருங்க, என்னை பார்க்க உங்களுக்கு பாவமா தெரியலையா, பாருங்கம்மா" என்றார். ஒரு துணை முதல்வர் இப்படி கெஞ்சும் தோரணையில் பேசுவதை சிலர் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.