மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை நினைத்தாலே உடல் நடுங்குகிறது.. வைகோ வேதனை

Google Oneindia Tamil News

Recommended Video

    பொள்ளாச்சி பாலியல் சம்பவம்.. வைகோ வேதனை-வீடியோ

    மதுரை: பொள்ளாச்சி சம்பவத்தில் யாராக இருந்தாலும் அனைவரும் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

    மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அப்போது பேசியதாவது:

    நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேரதலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றார்.

    Pollachi Rapist: படிக்கும் போதே காம வெறியனாக வலம் வந்த திருநாவுக்கரசு.. யார் இவர்?.. பரபர தகவல்கள் Pollachi Rapist: படிக்கும் போதே காம வெறியனாக வலம் வந்த திருநாவுக்கரசு.. யார் இவர்?.. பரபர தகவல்கள்

    காரணம் ஏற்புடையதல்ல

    காரணம் ஏற்புடையதல்ல

    21 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்தாமல் 3 தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடத்தாதற்கு தேர்தல் ஆணையம் கூறும் காரணம் ஏற்புடையதல்ல, முன்பு நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருந்த போது தேரதல் நடத்தப்பட்டுள்ளது. சித்திரை திருவிழா அன்று தேர்தல் நடைபெறுவதால் வாக்குப்பதிவு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, வாக்குப்பதிவை வேறு தேதிக்கு மாற்றி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது.

    முகநூல் நட்பு

    முகநூல் நட்பு

    நட்பு என்ற பெயரில் முகநூல் மூலமாக இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ள பொள்ளாச்சி சம்பவம் தமிழகத்தையே உலுக்கும் சம்பவமாக உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பம் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மனம் நடுங்குகிறது

    மனம் நடுங்குகிறது

    பொள்ளாச்சி சம்பவத்தை நினைத்தாலே மனம் நடுங்குகிறது. யாராக இருந்தாலும் அனைவரும் குற்றவாளி கூன்டில் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும். சம்பவத்தின் பின்னனியில் யாராக இருந்தாலும் அவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்.

    மோடியின் கருத்தா?

    மோடியின் கருத்தா?

    கர்நாடகாவில் 22 மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்று சட்டசபையை மாற்றியமைப்போம் என எட்டியூரப்பா கூறிய கருத்திற்கு புல்வாமா தாக்குதலினால் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு வானுயர்ந்து விட்டதாக எட்டியூரப்பா கூறியது கருத்தா அல்லது மோடியின் கருத்தை பிரதிபலிக்கிறாரா என தெரியவில்லை. இதே போன்று அடிக்கடி எட்டியூரப்பா தவறான கருத்துக்களை பேசி வருகிறார் என்று பதிலளித்தார்.

    English summary
    Pollachi incident: criminals should be punished says Vaiko
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X