மதுரை விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்காதது ஏன்?.. பொன் ராதாகிருஷ்ணன் அடடே விளக்கம்
Recommended Video
மதுரை: மதுரையில் தமிழ்த்தாய் வாழ்த்து முன் கூட்டியே இசைக்கப்பட்டிருக்கும் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட மோடிக்கு எதிராக மதிமுக, மே 17 இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் இயக்கம் ஆகியன இணைந்து கருப்பு கொடியை ஏந்தின. மேலும் மோடி மதுரை விமான நிலையத்தை மிதித்தவுடன் வைகோ தன்னிடம் இருந்த கருப்பு பலூன்களை பறக்கவிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை 11.30 மணியளவில் மதுரை விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர், துணை முதல்வர், நாடாளுமன்ற சபாநாயகர் தம்பிதுரை, மத்திய அமைச்சர்கள், உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
ஆங்கிலத்தில் பேசிய மோடி
அங்கிருந்து கருப்பு கார் மூலம் தோப்பூர் சென்றார் பிரதமர் மோடி.
இந்த நிலையில் மோடி எப்போதும் இல்லாத அளவுக்கு நேற்று நடந்த அரசு விழாவிலும் சரி கட்சி விழாவிலும் சரி இந்தியில் பேசவில்லை. மாறாக ஆங்கிலத்திலேயே பேசினார்.
அதிருப்தி
பொதுவாக அரசு விழாக்கள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் முடிக்கப்படும். ஆனால் இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடவில்லை, தேசிய கீதமும் இசைக்கப்படவில்லை. இதை பார்த்த பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
பாதிப்பு
இந்த நிலையில் தமிழ்த்தாய் பாடாதது குறித்தும் வைகோ கருப்பு கொடி காட்டியது குறித்தும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில் மோடிக்கு எதிராக கருப்பு கொடி, கருப்பு பலூன்களை பறக்கவிட்டதால் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
என்ன அவசரம்?
மதுரையில் நடந்த எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் முன்கூட்டியே தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டிருக்கும். பாஜக கூட்டணி குறித்து இப்போது என்ன அவசரம்? உரிய நேரத்தில் கூறுவோம் என்றார் பொன் ராதாகிருஷ்ணன். எனினும் தேசிய கீதம் பாடாதது ஏன் என்பது குறித்து அவர் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.