உரிய சிகிச்சை இல்லாததால் கர்ப்பிணி பலி.. மதுரையில் கணவர் புகார்
மதுரை: மதுரையில் மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் அவர் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.
மதுரை புதூர் பகுதியைச் சேர்ந்த மணிமுத்துவின் மனைவி சக்தி காளி. நிறைமாத கர்ப்பிணியான இவர், புதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக நேற்று மதியம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் திடீரென சக்தி காளியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும்போது வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையத்தில் இரவு பணியில் மருத்துவர் இல்லை. அதனால் பணியில் இருந்த செவிலியர்கள் தனது மனைவியை தாக்கியதாகவும் அவரை வேறு மருத்துவமனையில் அனுமதிக்க 108 ஆம்புலன்ஸ் தர மறுத்ததாகவும் மணிமுத்து தெரிவித்தார்.
சுபஸ்ரீ பலியான வழக்கு.. பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது எப்.ஐ.ஆர்.. போலீஸ் நடவடிக்கை!
கர்ப்பிணிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதால் வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம் என கேட்டும் செவிலியர்கள் அனுப்ப மறுத்து கேட்டை பூட்டிவிட்டனர் என புகார் தெரிவித்தனர்.