மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மதுரையில் ராகிங் கொடுமை.. விஷம் குடித்த இரு கல்லூரி மாணவர்களில் மேலும் ஒருவர் பலி

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் கல்லூரி மாணவர்கள் ராகிங் கொடுமையால் விஷம் அருந்தி சிகிச்சையில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு மாணவர் பலியாகிவிட்டார்.

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர்கள் முத்துப்பாண்டி மற்றும் பரத்.

Ragging in Madurai college: 2 students were died after taking poison

இந்த நிலையில் இருவரையும் சக மாணவர்கள் ராகிங் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவமானம் அடைந்த இருவரும் கடந்த 2ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இருவரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனில்லாமல் பரத் இறந்தார்.

இந் நிலையில் முத்துப்பாண்டியை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முத்துப்பாண்டியும் இன்று உயிரிழந்தார்.

ராகிங் கொடுமையால் 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராகிங் செய்ததாக அந்த கல்லூரியை சேர்ந்த ஜெய்சக்தி என்ற இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
2 students belongs to Madurai Private college committed suicide after ragging. One student arrested in this connection.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X