வெயிட்டிங் ஃபார் தர்பார் .. மதுரையில் மண்சோறு சாப்பிட்டு அலகு குத்திய ரஜினி ரசிகர்கள்
Recommended Video
மதுரை: நடிகர் ரஜினிகாந்த் நடித்து நாளை வெளியாகும் தர்பார் திரைப்படம் வெற்றி பெற வேண்டி அவரது ரசிகர்கள் நூதன பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏ.ஆர்.. முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் திரைப்படம் நாளை வெளியாகிறது. வழக்கம் போல ரஜினி ரசிகர்கள் இதை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.
இத்திரைப்படம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக ரசிகர்கள் நூதன பிரார்த்தனைகளை மேற்கொண்டுள்ளனர். மதுரையில் ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு நேர்த்தி கடன் செலுத்தினர்.
இதேபோல் சில ரசிகர்கள் அலகு குத்தியும் தர்பார் வெற்றி பெற வழிபாடு நடத்தினர். பல இடங்களில் வித்தியாசமான வாசகங்களுடன் போஸ்டர்களையும் ரஜினி ரசிகர்கள் ஒட்டியும் உள்ளனர்.
Madurai: Fans of Rajinikanth offer special prayers at a temple for success of his upcoming movie 'Darbar'. A fan (pic 4) says,"We kept fast for 15 days & performed 'Man Soru’ (Eating food on floor without plate). This will definitely result in grand success of movie"#TamilNadu pic.twitter.com/bpGGpUhSzE
— ANI (@ANI) January 8, 2020
ஏற்கனவே தர்பார் திரைப்படத்துக்கு சிறப்பு காட்சிகளை வெளியிட தமிழக அரசும் அனுமதித்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் காத்திருக்கின்றனர்.