வைகை நதியோரம்.. கரை புரண்டோடும் வெள்ளம்.. நன்றி மழையே.. ரொம்ப ரொம்ப நன்றி!
Recommended Video
மதுரை: நீண்ட மாதங்களுக்கு பிறகு வடகிழக்கு பருவமழையால் தண்ணீர் நிரம்பிய வைகை ஆற்று படுகையால் மக்கள் மகிழச்சி அடைந்துள்ளனர். மதுரை வைகை ஆற்றிலும் இரு கரைகளைத் தொட்டு தண்ணீர் ஓடுவதால் மக்கள் வேடிக்கை பார்க்க குவிந்து வருகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து அணைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கண்மாய்கள் குளங்கள் கணிசமாக நிரம்பி வருகிறது.
இதனையடுத்து மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகள் எங்கிலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிரம்பி வழிந்த வண்ணம் குளம் போல் இருந்துவருகிறது. கடந்த சில மாதங்களாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்ட வைகை ஆறு மதுரையில் கடந்த சில தினங்கள் பெய்த மழையின் காரணமாக வைகை ஆறு நிரம்பி காட்சியளிக்கிறது.
ராத்திரியில் மழை.. வெள்ளப் பெருக்கு.. வீடுகளுக்குள் தண்ணீர்.. நீந்தி வந்த பாம்புகள்.. மணப்பாறையில்
மதுரையின் ஸ்மார்ட் திட்டத்தின்கீழ் வைகையின் குறுக்கே தடுப்பணை பணிகள் நடைபெற்று வருகிறது. வைகை ஆற்றில் நிரம்பிய மழை நீர் தடுப்பணையை கடக்கும் போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டார் போன்று காட்சியளிக்கிறது.
#Madurai #Vaigai 🤩🤩🤩 pic.twitter.com/AaQZ6TDLdA
— மதுரை பையன் 🇮🇳 (@prithivi92) October 18, 2019
நீண்ட மாதங்களுக்கு பிறகு வைகை ஆற்றின் படுகையில் தண்ணீர் நிரம்பியதால் சிறு செடிகள், ஆகாய தாமரை வேர்கள், குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை பொதுமக்கள் வைகை ஆற்று பாலத்தின் மேல் இருந்தும், வைகை கரையோரமிருந்தும் மிக ஆர்வமாக கண்டுகளித்து வருகின்றனர். மேலும் வடகிழக்கு பருவமழை காரணமாக நிலத்தடிநீர் கணிசமாக உயர்வதால் பொதுமக்கள், சோளம், மல்லிகைப்பூ போன்ற சிறுகுறு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.