மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

துரோகிகளை வீழ்த்த ஆர்.கே.நகர் மக்கள் என்னை அனுப்பி உள்ளனர்... டிடிவி. தினகரன் பேச்சு

Google Oneindia Tamil News

திருப்பரங்குன்றம்: மக்களின் எதிர்ப்பால், அமைச்சர்கள் பலர் ஊருக்குள் செல்ல முடியாத நிலையில் உள்ளனர் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளரை ஆதரித்து, நாகமலை புதுக்கோட்டை பகுதியில் டி.டி.வி. தினகரன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ஆர்.கே.நகர் மக்கள் என்னை வெற்றி பெறச் செய்து தமிழகம் முழுவதும் துரோகிகளை வீழ்த்த அனுப்பியுள்ளனர் என்றார்.

RK Nagar people have sent me to bring down the traitors Says TTV. Dinakaran

இடைத்தேர்தலில் துரோகிகள், விரோதிகளான அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று கூறிய அவர், துரோகத்தை ராஜதந்திரம் என்கிறார்கள். இதை எங்காவது கேள்விப்பட்டதுண்டா? என கேள்வி எழுப்பினார்.

முன்னதாக, துரோகிகளுக்கு எதிராக மதுரை மக்கள் வாக்களித்து உலக தமிழர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்தார். அடுத்த சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை டெபாசிட் இழக்கச் செய்வோம் என்றும் கூறியுள்ளார்.

அமித் ஷாவிடம் கேளுங்கள்.. என்னிடம் கேட்காதீர்கள்.. ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்காத மோடி! அமித் ஷாவிடம் கேளுங்கள்.. என்னிடம் கேட்காதீர்கள்.. ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்காத மோடி!

மேலும், ஆட்சி அமைப்பது தி.மு.க.வின் ஆசையாக இருக்கலாம். ஆனால், அவர்களின் கனவு நிறைவேறுவதற்கு வாய்ப்பே கிடையாது. ரகசிய கூட்டுக்கு வாய்பே இல்லை என்பதற்கு தான் இதனை சொல்வதாகவும் விளக்கமளித்தார்.

English summary
TTV. Dinakaran Said that RK Nagar people have sent me to bring down the traitors
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X