ஆபாசம்.. இப்படியுமா பேசுவாங்க.. ரவுடி பேபி சூர்யா மீது மதுரை கலெக்டரிடம் இந்து மக்கள் கட்சி புகார்
மதுரை: ரவுடி பேபி சூர்யா, சிக்கா சிக்கந்தர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இணையதளம் மூலமாக மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தி வருகின்ற வேலையில் அதனை கெடுக்கின்ற வகையிலும்,பெண்களை முக சுழிக்க வைக்கும் வகையிலும்,ஆபாசமாக தமிழ் சமுதாய நாகரீகத்தை சீரழிக்கும் வகையில் யூடியூப் மற்றும் இணையதளத்தில் ஆபாச காணொலி வெளியிடுவதாக அந்த புகார் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சி சார்பில் இந்த புகார் மனு இன்று வழங்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா கார் டிரைவர் மரண வழக்கு.. தீவிரமாகும் விசாரணை.. சிக்க போகும் முக்கிய புள்ளிகள்?
ஆபாச வீடியோ
ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா (எ) சிக்கந்தர் ஆகியோர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க கோரியும்,சமூகவலைத்தலங்களில் ரவுடிபேபி சிக்கா பேசிய அறுவருக்கதக்க வீடியோக்களை தடை செய்யவும், ரவுடிபேபி சிக்கா இணையதளங்களை முடக்கவும் இந்து மக்கள் கட்சி தனது மனுவில் கோரியுள்ளது.
போராட்டம் நடத்துவதாக எச்சரிக்கை
தமிழக கலாசாரம் பண்பாட்டை சீரழிக்கும் வகையில், வியாபார நோக்கத்தோடு வேண்டுமென்று திட்டமிட்டு சமுதாய சீர்க்கேட்டை உண்டாக்கும் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா என்ற சிக்கந்தர் மீது நடவடிக்கை இல்லை எனில் மதுரை உள்பட தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டம் விரைவில் வலுபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் என்று இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
மதுரையில் துப்பாக்கி நடமாட்டம்
இதனிடையே, மதுரையில் துப்பாக்கி வைத்து மிரட்டி பணம் பறித்த பிரபல ரவுடியை கைது செய்த போலீசார் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்துள்ளனர். மதுரை மாநகர் சம்மட்டிபுரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சரத்குமார் என்பவர் எஸ் எஸ் காலனி காவல் நிலையத்துக்கு உட்பட்ட அரசரடி பகுதியில் நடந்து சென்ற ஹரிஹரசுதன் என்பவரை துப்பாக்கியை காட்டி மிரட்டி 1100ரூபாய் பணத்தை பறித்ததாக அளித்த புகாரின் பேரில், எஸ் எஸ் காலனி காவல்துறையினர் சரத்குமாரை கைது செய்து அவரிடமிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேறு குற்றங்கள்
இவர் துப்பாக்கியை வைத்து வேறு ஏதும் குற்றச் செயல்களில் ஈடுபட்டாரா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் பிரபல ரவுடியிடம் நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.