மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மதுரையைக் கலக்கிய ரவுடி செளந்தரபாண்டி.. மாமா வீட்டில் தூங்கியபோது சரமாரி வெட்டிக் கொலை

Google Oneindia Tamil News

மதுரை: மதுரை முத்துபட்டி அய்யனார்புரம் 4வது தெருவை சேர்ந்த பிரபல ரவுடி சௌந்தரபாண்டி (வயது 43) தலை துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இவர் மீது கொலை, கொள்ளை, கஞ்சா, சாராயம் காய்ச்சுவது, அடிதடி கட்டப்பஞ்சாயத்து, என தமிழகம் முழுவதும் 18-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. நேற்று மதியம் சௌந்தரபாண்டி அவருடைய மாமா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம கும்பல் 5 பேர் தூங்கிக்கொண்டிருந்த சௌந்தரபாண்டியன் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

Rowdy hacked to death in madurai

அதேபோல் சம்பவத்தை தடுக்க வந்த சௌந்தரபாண்டியனின் உறவினரயும் ரவுடி கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து,அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சௌந்தரபாண்டியின் தலையை துண்டாக அறுத்து கையில் எடுத்துச் சென்று மதுரை வசந்த நகர் ரயில்வே தண்டவாளம் அருகே தூக்கி வீசி மர்ம கும்பல் தப்பி ஓடினர்.

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சௌந்தரபாண்டியனின் தலையில்லா உடலை காவல் துறையினர் கைப்பற்றினர் தொடர்ந்து அவரது தலையை மர்ம கும்பல் வீசி சென்ற இடத்தில் அரை மணி தேடி கண்டெடுத்து உடற்கூறாய்வுகாக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை தேடி பிடிப்பதற்கு ஐந்து பேர்கொண்ட காவல் தனிப்படையினர் அமைக்கப்பட்டு இருக்கின்றனர். மதுரையை பதற வைத்துள்ளது இந்த படுகொலைச் சம்பவம்.

English summary
A rowdy was hacked to death in Madurai yesterday by a five member gang.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X