மு.க.அழகிரியை சிபிஎம் வேட்பாளர் வெங்கடேசன் சந்திக்கப் போவது ஏன்.. பரபர விளக்கம்
Recommended Video
மதுரை: மதுரை தொகுதியின் வாக்காளர் என்ற அடிப்படையில் மு.க.அழகிரியை சந்தித்து அவரது ஆதரவைக் கேட்பேன் என்று மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ். வெங்கடேசன் கூறியுள்ளார்.
மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் வேட்பாளாராக நியமிக்கப்பட்ட நிலையில் மதுரையில் பிரச்சாரத்தை இன்று தொடங்குகிறோம். மதுரை நாடாளுமன்ற தொகுதி மக்களின் மிக முக்கிய தேவை குறித்து அறிந்துள்ளேன்.
நினைத்தது நடக்கிறது.. மு.க.அழகிரியை சந்திக்கவுள்ளார் சு. வெங்கடேசன்
பண்பாட்டைக் காப்பேன்
மதுரை மாநகர் பண்பாட்டு தலைநகரம், கலாச்சார நகரம் தொழிற்வளர்ச்சி, வேலைவாய்ப்பை, கல்விசேவை, குடிநீர் தீர்வு, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனம் கொண்டு வர நடவடிக்கை, தொழில்வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்தும் குழு அறிக்கை தயார் செய்துள்ளது.
மதுரைக்கு புதிய ஆற்றல்
இதனை கூறி வாக்கு சேகரிக்க உள்ளேன், கைவிடப்பட்ட நகரமாக மதுரை உள்ளது. மதுரைக்கான புதிய ஆற்றலை பெறுவதற்கு புதிய வாக்குறுதிகளை கூறி வாக்குகள் கேட்க உள்ளோம்.
அழகிரியுடன் சந்திப்பு
மதுரை தொகுதியின் வாக்காளர் என்ற அடிப்படையில் மு.க.அழகிரியை சந்திக்க வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து தோழமை கட்சியினரை சந்திப்பேன். மதுரையில் உள்ள 15 லட்சம் வாக்காளர்களையும் சந்திக்க உள்ளேன் என்றார் வெங்கடேசன்.
களப் பணியாளர்கள்
மதுரையில் அழகிரி ஆதரவு வட்டம் களப் பணிகளில் கில்லாடி என்பதால் அழகிரியின் ஆதரவு கிடைத்தால் இந்த களப் பணியாளர்களும் தங்களுக்கு ஆதரவாக இறங்கிச் செய்வார்கள் என்பதால், அழகிரியை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் கம்யூனிஸ்ட் வேட்பாளர் என்று கூறப்படுகிறது.