போகிற போக்கில், பழ.கருப்பையாவிற்கு குட்டு வைத்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
Recommended Video
மதுரை: பழ.கருப்பையாவை விமர்சனம் செய்து தனது பேட்டியில் கருத்து தெரிவித்தார், அமைச்சர், ஆர்.பி.உதயகுமார்.
சர்கார் திரைப்படத்தில் முதல்வர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் பழ.கருப்பையா. இவர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, துறைமுகம் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர்.
ஆனால், 2016ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பாக, கட்சி தலைமையுடன் பழ.கருப்பையா முரண்பட்டார்.
சீக்கிரம் வாங்க.. கட்சி ஆரம்பிங்க.. விஜயை அரசியலுக்கு அழைக்கும் உயிர் ரசிகர்கள்!
அதிமுக எம்எல்ஏ
கட்சி தொடர்பான கருத்துகளை பகிரங்கமாக தெரிவித்தார். இதையடுத்து, பழ.கருப்பையாவை, அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விடுவிப்பதாக, ஜெயலலிதா அறிவித்தார். இதைத்தொடர்ந்து பழ.கருப்பையா, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் திமுகவில் இணைந்துள்ளார்.
பழ.கருப்பையா விளாசல்
இந்த நிலையில், சர்கார் திரைப்படத்திற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்திவருவதை கண்டித்து ஊடகங்களில், பழ.கருப்பையா கருத்து தெரிவித்து வருகிறார். விஜய் நினைத்தால் அதிமுக அரசுக்கே ஆட்டம் காட்ட முடியும் என்றும், விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தெரிவித்தார்.
பதவி கிடைக்கவில்லை
இதுகுறித்து மதுரையில் இன்று நிருபர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளிக்கையில், பழ.கருப்பையா தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை, சபாநாயகர் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக, வருத்தப்பட்டு, கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டு நீக்கப்பட்டவர். அவர் யோசித்து பார்த்து கருத்து சொல்ல வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
பழ.கருப்பையா மீது கோபம்
சர்கார் இயக்குநர் முருகதாஸ், நடிகர் விஜய் மட்டுமின்றி, பழ.கருப்பையாவும், அதிமுகவினர் கோபத்தை தூண்டியுள்ளார் என்பதை அமைச்சர் கருத்து பிரதிபலிப்பதாக உள்ளது.