"மோனிஷா இல்லாமல் வாழ்வதா".. டிரான்ஸ்பார்மரை நோக்கி ஓடிய சக்தி.. தூக்கி வீசப்பட்டார்!
மதுரை: "மோனிஷா இல்லாமல் என்னால வாழவே முடியாது" என்று புலம்பி கொண்டே இருந்தார் சக்தி.. தற்கொலை செய்யபோகிறேன்.. என்று மிரட்டல் விடுத்தவாறு டிரான்பார்மரில் ஏறியவருக்கு நிஜமாகவே கரண்ட் அடித்து தூக்கி வீசப்பட்டார்.. இந்த பகீர் வீடியோவும் வெளியாகி அனைவரையும் பதற வைத்துள்ளது.
மதுரையை சேர்ந்த தம்பதி சக்தி - மோனிஷா.. சக்தி ஒரு ராணுவ வீரர்.. இவர்களுக்கு கல்யாணம் ஆகி 4 மாதம்தான் ஆகிறது.
கல்யாணம் ஆன சில நாட்களில் சக்தி வராணுவ பணிக்கு சென்றுவிட்டார்.. அதனால் மோனிஷா மட்டும்தான் மாமியார் வீட்டில் தங்கி இருந்தார்.. அப்போது சக்தியின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு அவரை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
மோனிஷா
இந்த சமயத்தில் லீவில் சக்தி ஊருக்கு வந்தார்.. அப்போது, திரும்பவும் வரதட்சணை பிரச்சனை ஆரம்பமானது.. இதனால் மனமுடைந்த மோனிஷா 3 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதில் உண்மை காரணம் தெரியவில்லை.
சக்தி
இதனால், போலீசார் இது சம்பந்தமாக விசாரித்து வந்தனர்.. மற்றொரு புறம் ஆர்டிஓ விசாரணையும் நடக்கிறது.. இந்த விசாரணைக்காக மதுரை கலெக்டர் ஆபீசுக்கு சக்தியின் குடும்பத்தினர் வந்திருந்தனர். ஏற்கனவே மோனிஷா மரணம், விசாரணை என்று விரக்தியில் இருந்த சக்தி, திடீரென்று டிரான்ஸ்ஃபார்மரில் ஏறி தற்கொலை செய்ய போகிறேன் என்று சொன்னார்.
கூச்சல்
அதன்படியே கலெக்டர் ஆபீஸ் எதிரில் இருந்த டிரான்ஸ்பார்மரிலும் ஏறிவிட்டார்.. இதை பார்த்து பதறிய பொதுமக்களும், உறவினர்கள் பதறினர்.. கீழே இறங்கும்படி கத்தி கூச்சலிட்டனர்.. ஆனாலும் சக்தி இறங்கவே இல்லை.. கொஞ்ச நேரத்தில் அங்கிருந்த மின் கம்பியில் அவரது கைபட்டுவிட்டது.
அனுமதி
வோல்டேஜ் அதிகம் என்பதால், டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறி சக்தி தூக்கி வீசப்பட்டார். உடனே பொதுமக்கள் அவரை மீட்டு ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.. தீவிரமான சிகிச்சையும் நடந்து வருகிறது. இப்போது சக்தியின் நிலை ஆபத்தான நிலையில் உள்ளதாம்!