கண்டக்டர் மண்டையை பிளந்து வெறித்தனம்.. மக்கள் பீதி.. மதுரையிலும் உலா வரும் பட்டாக்கத்தி மாணவர்கள்
மதுரையில் அரசு பஸ் கண்டக்டரை மாணவர்கள் தாக்கினார்கள்
Recommended Video
மதுரை: மதுரையிலும் பட்டாக்கத்தி மாணவர்கள் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டனர். அரசு பஸ் கண்டக்டரை 2 மாணவர்கள் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக பட்டாக்கத்தி மாணவர்கள் என்றாலே சென்னைதான் கண்முன் வரும். இப்போதுதான் ரூட் தல விவகாரம் ஒருவழியாக அடங்கி உள்ளது.
கையில் கத்தி, அரிவாளுடன் சுற்றி திரிந்த மாணவர்களின் பரபரப்பு அடங்குவதற்குள் மதுரையில் இன்னொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
மதுரை பெரியார் பஸ் ஸ்டேண்டில் இருந்து ராஜாக்கூர் வரை செல்லும் சிட்டி பஸ்ஸில் 2 மாணவர்கள் ஏறி உள்ளனர். இவர்கள் ஒரு தனியார் பாலிடெக்னிக் காலேஜ் யூனிபார்ம் அணிந்திருந்தனர். அப்போது கண்டக்டர் கணேசன் மாணவர்களிடம் வந்து டிக்கெட் கேட்டார்.
இதுதான் விஷயமே.. இதுக்குதான் தகராறு ஆரம்பித்திருக்கிறது. மாணவர்களுக்கும் கண்டக்டருக்கும் வாக்குவாதம் சண்டையாகி விட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் ரெண்டு பேரும் தங்களது பையில் மறைத்து வைத்திருந்த இரண்டு பட்டாக்கத்தியால் கண்டக்டரின் மண்டையை தாக்கியுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த கண்டக்டர் கணேசை மற்ற பயணிகள் மீட்டு ராஜாஜி ஆஸ்பத்திரியில்அனுமதித்தனர். காலேஜ் மாணவர்கள், பட்டாக்கத்தியுடன் பஸ்ஸில் ஏறியதுடன், கண்டக்டரை வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அந்த மாணவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.