எங்களுக்கு சந்தேகமா இருக்கு.. பயமா இருக்கு.. ஆளை போடுங்க.. தங்க தமிழ்செல்வன்
வாக்கு சாவடி மையங்களில் ஏஜென்ட்டுகளை நியமிக்க தங்க தமிழ்செல்வன் கோரியுள்ளார்.
Recommended Video
மதுரை: வாக்குசாவடிக்குள் ஆள் உள்ளே போறது, செக் பண்றது.. இதெல்லாம் பார்த்தால் எங்களுக்கு பயமா இருக்கு.. நைட் நேரத்துலகூட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு ஏஜெண்ட் போடணும்" என்று தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள எண்ணிக்கை மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இங்கு நேற்று பெண் தாசில்தார் உள்ளிட்ட சிலர் காலை 3 மணியளவில் அனுமதியில்லாமல் சென்றதாகவும், அங்கு 2 மணி நேரம் இருந்து சில தகவல்களை சேகரித்ததாகவும் செய்திகள் வெளிவந்தது. இந்த விவகாரத்தில் பெண் தாசில்தார் சம்பூர்ணம் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பிரிந்து போன வாக்குகள்.. குஷியில் அமமுக.. ஆட்சி தப்புமா.. பெரும் கவலையில் அதிமுக !
அத்துமீறல்
இந்த நிலையில், இது தொடர்பாக தங்க.தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் சொன்னதாவது: "இப்போ போட்டியே திமுகவுக்கும், அமமுகவுக்கும்தான். மதுரையில பெண் தாசில்தார் அதிகாரி அத்துமீறி எதுக்காக அந்த வாக்குசாவடி ரூமுக்கு போனாங்க.. அதை எங்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவரோ, தேர்தல் ஆணையரோ தெரியப்படுத்தல. இல்லேன்னா, பத்திரிகைகாரங்களாகிய நீங்களே பேட்டியே கேட்டிருக்கலாம். அதையும் நீங்க கேட்கல.
ஏஜெண்ட்
ஆனா அந்த அதிகாரியை சஸ்பெண்ட் பண்ணியிருக்காங்க. என்ன காரணத்துக்காக சஸ்பெண்ட் பண்ணாங்கன்னும் தெரியல. வாக்கு எண்ணும் மையத்தில் ஒரு ஏஜெண்ட் போடுவோம். இதை எல்லா கட்சிக்காரங்களும் செய்வாங்க.
முகவர்கள்
ஆனா நைட் பத்து மணி வரைக்கும்தான் இருக்கணுமாம். அது ஏன்? 10 மணிக்கு மேலதானே அங்க ஆள் இருக்கணும்? பகல் நேரத்துல விட நைட் நேரத்திலதானே தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கு. அதனால வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் 24 மணி நேரமும் இருக்க அனுமதிக்கணும்.
புகார் தர போகிறோம்
மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதி பாதுகாப்பாக இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக நாளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்க போறேன்" என்றார்.