சுப்ரீம்கோர்ட் சொன்னது நல்ல அட்வைஸ்தான்.. கார்த்தி சிதம்பரம் அசால்ட்!
Recommended Video
மதுரை: உச்ச நீதிமன்றம் சிவகங்கை மீது கவனம் செலுத்துங்கள் எனக் கூறிய கருத்துக்கு கார்த்தி சிதம்பரம் பதில் அளித்துள்ளார்.
வெளிநாடு செல்ல பிணைத் தொகையாக செலுத்திய 10 கோடி ரூபாயை திருப்பி அளிக்க வேண்டும் என்ற கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், தொகுதியை கவனிக்கும்படி அவருக்கு அறிவுரை வழங்கியது.
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் உச்சநீதிமன்றம் சிவகங்கை தொகுதி மீது கவனம் செலுத்துங்கள் என அறிவுறுத்தியது தொடர்பான கேள்விக்கு உச்ச நீதிமன்றத்தின் அறிவுரை நல்ல அறிவுரைதான், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி மீது கவனம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்துவது நல்ல அறிவுரைதான்.
எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற காங்கிரஸ் அதிரடி திட்டம்... தேசிய அரசியலில் புதிய 'ட்விஸ்ட்'!
ஆனால் நீதிமன்றத்தின் அறிவுரை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தொடர வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனைவரின் நோக்கம். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கிற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இந்தியாவில் நாளை அமையவுள்ள புதிய அரசு அனைவருக்கும் பொதுவான அரசாக இருக்கும் என நம்பிக்கை உள்ளது.
தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பாகுபாடின்றி தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுத்து உரிமையை பெறுவோம். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம்தான். வடநாடுகளில் குறிப்பாக ஹிந்தி பேசும் மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியடைந்ததற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. காங்கிரஸ் வெற்றி தோல்விகளை சந்தித்த கட்சி என்பதால் தோல்வியிலிருந்து காங்கிரஸ் மீண்டும் எழுந்து வரும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறினார்.