தேர்தலுக்கு அப்புறம் பாருங்க அதிமுக எப்படி உடையப்போகுதுன்னு.. துரைமுருகன் ஆருடம்!
மதுரை: தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் பல பிளவுகள் ஏற்படும் என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டபிடாரம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பரங்குன்றம் தி.மு.க., வேட்பாளர் சரவணனை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட், சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் திமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, லோக்சபா தேர்தலில் 36 இடங்களிலும் சட்டசபை இடைத்தேர்தலில் 20 இடங்களிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்.
விவசாய நிலங்களை அபகரித்தவர்ளை சிறையில் தள்ளியே தீருவோம்... ராபர்ட் வதேராவை தாக்கிய மோடி
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சில் கண்ணியம் இல்லை. திருப்பரங்குன்றம் தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.கவில் எத்தனை பிளவுகள் வருகிறது என பாருங்கள்.
நாங்கள் பணம் கொடுப்பதாக கூறுகின்றனர். எங்களிடம் பணம் இல்லை. அவர்கள்தான் போலீஸ் வாகனங்களில் பணம் கொண்டு செல்கின்றனர். இது அ.தி.மு.க., விற்கு கடைசி தேர்தல். இவ்வாறு துரைமுருகன் பேசினார்.