மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு... கருப்பு கொடியை கையில் எடுக்க திருமுருகன் காந்தி முடிவு

Google Oneindia Tamil News

மதுரை : ஜனவரி 27 ம் தேதி மதுரை வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டப்படும் என்று மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.

உயர்சாதிகளின் நலனை மட்டுமே பாஜக கருத்தில் கொள்கிறது என்றும், சென்னை லயோலா கல்லூரிக்கு பாஜக நெருக்கடி கொடுப்பதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ThiruMurugan Gandhi Decided to Show the Black Flag Agaist To Modi

மேலும் மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்போது பெரியார் சிலையை அங்கேயே வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்க்கொண்டுள்ளார்.

முன்னதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்படும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகத்தை சேர்ந்த கலிபூங்குன்றன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதையடுத்து, ஏற்கனவே திமுக தொடர்ந்துள்ள வழக்குடன் இந்த வழக்கையும் சேர்த்து பிப்ரவரி 18 ம் தேதி விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

English summary
Show Off Black Flag Agaist To Modi on 27 th In Madurai, Says ThiruMurugan Gandhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X