தென்மாவட்டங்களில் கொரோனா தாண்டவம்- மதுரை 450; விருதுநகர் 328; திண்டுக்கல் 157 பேருக்கு பாதிப்பு
மதுரை: தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கொரோனா மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இன்று ஒரே நாளில் மதுரையில் 450 பேருக்கும் விருதுநகரில் 328; திண்டுக்கல்லில் 157 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் மிக அதிகபட்ச உச்சமாக இன்று ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,47,324 ஆக அதிகரித்திருக்கிறது.
சென்னையில் 1078 பேருக்கும் செங்கல்பட்டில் 264; காஞ்சிபுரத்தில் 117; திருவள்ளூரில் 360 பேருக்கு கொரோனா உறுதியானது. வடமாவட்டங்களைப் போலவே தென் மாவட்டங்களிலும் கொரோனா கோரத் தாண்டவமாடுகிறது.
தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட பாதிப்பு- முதல் முறையாக 4,526 பேருக்கு கொரோனா
தமிழக மாவட்டங்களில் கொரோனா இன்றைய பாதிப்பு நிலவரம்:
- அரியலூர் 29;
- செங்கல்பட்டு 264
- சென்னை- 1078
- கோவை- 188
- கடலூர்- 14
- தருமபுரி- 7
- திண்டுக்கல் - 157
- ஈரோடு -28
- கள்ளக்குறிச்சி- 57
- காஞ்சிபுரம் - 117
- கன்னியாகுமரி - 122
- கரூர்- 5
- கிருஷ்ணகிரி- 10
- மதுரை- 450
- நாகப்பட்டினம் - 15
- நாமக்கல் -14
- நீலகிரி - 38
- பெரம்பலூர்- 1
- புதுக்கோட்டை- 56
- ராமநாதபுரம்- 64
- ராணிப்பேட்டை- 15
- சேலம் -58
- சிவகங்கை - 113
- தென்காசி -103
- தஞ்சாவூர்- 29
- தேனி- 53
- திருப்பத்தூர்- 32
- திருவள்ளூர்- 360
- திருவண்ணாமலை- 62
- திருவாரூர் -19
- தூத்துக்குடி- 112
- நெல்லை- 59
- திருப்பூர்- 12
- திருச்சி -117
- வேலூர்- 194
- விழுப்புரம்- 121
- விருதுநகர்- 328
Comments
English summary
TN Southern Districts have spike in Corona Positive numbers including Madurai.
Story first published: Tuesday, July 14, 2020, 19:56 [IST]