கி.வீரமணி மீது யாராவது கை வைத்தால் வெட்டுவேன்.. அது என் தர்மம்.. டி.ஆர்.பாலு பகிரங்க எச்சரிக்கை!
பகிரங்கமாக மிரட்டும் வகையில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு
மதுரை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மீது யாராவது கை வைத்தால் தாம் வெட்டுவேன் என மிக பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு.
ஏற்கனவே அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆவடி நாசர் உள்ளிட்டோரின் நடவடிக்கைகளால் கடும் அதிருப்தியில் இருந்து வரும் முதல்வருக்கு டி.ஆர்.பாலு பேச்சு புது தலைவலியை உருவாக்கியுள்ளது.
திமுகவின் பொருளாளர், திமுக மக்களவைக் குழுத் தலைவர் என உயர்ந்த பொறுப்புகளில் இருந்துக் கொண்டு, வெட்டுவேன், குத்துவேன் என டி.ஆர். பேசியது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சேது சமுத்திர திட்டம்.. உச்சநீதிமன்ற வழக்கை முதலில் வாபஸ் வாங்குங்க.. பாஜகவுக்கு டிஆர் பாலு அட்வைஸ்
திராவிடர் கழகம்
சேது சமுத்திர திட்டத்தை வலியுறுத்தி மதுரையில் திராவிடர் கழகம் நடத்திய திறந்தவெளி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, சற்று உணர்ச்சிவசப்பட்டு மனதில் தோன்றிய அனைத்தையும் கொட்டித்தீர்த்தார். யாராவது தனது தலைவரையோ, திக தலைவர் வீரமணியையோ சீண்டினாலோ தாக்க வந்தாலோ தாம் கையை வெட்டுவேன் என மிக பகிரங்கமாக கூறி எச்சரிக்கை விடுத்தார்.
எனக்கு பலம்
கீ.விரமணியால் திருப்பி அடிக்க முடியாது, ஏனென்றால் அவரிடம் பலம் இல்லை. என்னிடம் பலம் இருக்கிறது, அதனால் நிச்சயம் திருப்பி அடிப்பேன் என டி.ஆர்.பாலு பேசினார். மேலும், கீ.வீரமணி மீது கை வைக்க முயன்றவரை தாம் வெட்டுவது தன்னை பொறுத்தவரை தர்மம் என்றும் நியாயம் எனவும் கூறினார். எதற்காக டி.ஆர்.பாலு இப்படி திடீரென உணர்ச்சிவசப்படுகிறார் என்பது புரியாமல் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் குழம்பினர்.
பாஜக அரசுக்கு சாபம்
முன்னதாக தமிழர்களின் பாவம் பொல்லாதது என்றும் வயிறு எரிஞ்சு சொல்கிறேன் மீண்டும் பாஜகவால் வெற்றிபெற முடியாது எனவும் சாபம் விடுத்த டி.ஆர். பாலு, சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை பட்டியலிட்டு பேசினார். தன்னை எல்லோரும் முரடந் என்கிறார்கள், ஆம் முரடன் தான், எங்கே தவறு நடக்கிறதோ அங்கே முரடனாக மாறுவேன் என டி.ஆர்.பாலு பஞ்ச் டயலாக் அடித்தார்.
குழப்பம்
சேது சமுத்திர திட்டத்தின் அவசியம் பற்றி பேசச் சொன்னால், எதற்காக கையை வெட்டுவேன் என சம்பந்தமில்லாத தலைப்புக்குள் செல்கிறார் பாலு எனத் தெரியாமல் மாநாட்டில் பங்கேற்றவர்கள் குழப்பம் அடைந்தார்கள்.