மதுரை அலங்காநல்லூரில் இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதல்.. இருவர் பலி.. ஒருவர் படுகாயம்
மதுரை: மதுரை அலங்காநல்லூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடியைச் சேர்ந்த பிரேம்நாத் (38), மனோகரன் (62) ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் அலங்காநல்லூர் அருகே உள்ள தனது உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு மதுரை நோக்கி குலமங்கலம் வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக எதிரே வந்த மதுரை தத்தனேரியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் (19) இரு சக்கர வாகனத்தில் எதிர் திசையில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பிரேம்நாத்தும், மனோகரனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 3 கோடியை தொடுகிறது- உயிரிழப்புகள் 10 லட்சத்தை எட்டுகிறது
படுகாயமடைந்த ஸ்ரீனிவாசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த மனோகரன், பிரேம்நாத் உடல்களை மீட்ட அலங்காநல்லூர் போலீசார் உடற்கூராய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.