எம்.ஜி.ஆர் பிரச்சாரத்தில் நெருப்பு பறந்தது... இப்ப செருப்பு பறக்குது... கமல் பேச்சு
மதுரை: அந்தக்காலத்தில்எம்.ஜி.ஆர். பிரச்சாரம் செய்த போது நெருப்பு பறந்தது என்றும் இப்போது பிரச்சாரங்களில் செருப்பு பறப்பதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
மதுரை மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் அழகரை ஆதரித்து இன்று அக்கட்சியினர் நிறுவனர் கமல் ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
மதுரை பழங்காநத்தம், வடக்கு மாசி வீதி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது மக்களிடம் கமல் பேசியதாவது: முன்பு எம்.ஜி.ஆர்.வந்து தேர்தல் பிரச்சாரத்துக்கு போன நெருப்பு பறக்கும். இப்போது செருப்பு பறக்குது. அதற்கு காரணம் மக்கள் அல்ல. இவர்கள்(அரசியல்வாதிகள்) செய்த அட்டூழியம். பல அட்டூழியங்களை செய்துவிட்டு, இன்னமும் மக்கள் கூலக்கும்பிடு போட்டு நிற்க வேண்டும் என நினைப்பது முற்றிலும் மடத்தனம்.
வீரமணி பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் செருப்பு வீச்சு! தி.க.வினர் 2 பேரின் மண்டை உடைப்பு
தன்னைவிட பலசாலிகளை பார்த்தால் கூலக்கும்பிடு போடுவது (அரசியல்வாதிகள்) அவங்களுடைய வேலை. மக்களுடைய வேலையாக அது இருக்கக்கூடாது. மக்கள் நீதி மய்யம் கட்சி மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்தால் அந்த பிரச்னையை தீர்க்க நானே வருவேன். அவர்கள் தவறு செய்தது உறுதியானால் அவர்களின் ராஜினாமா கடிதம் மக்களாகிய உங்கள் கைகளுக்கு வரும்" இவ்வாறு கூறினார்.