மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அலங்காநல்லூர் பைனான்சியர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. 2-ஆவது மனைவியே கொன்றது அம்பலம்

Google Oneindia Tamil News

Recommended Video

    கணவனை கூலிப்படையை ஏவி 2-ஆவது மனைவியே கொலை செய்தது அம்பலம்-வீடியோ

    மதுரை: அலங்காநல்லூர் பைனான்சியர் வெட்டிக் கொலை செய்யபட்ட வழக்கில் கூலிப்படையை ஏவி 2-ஆவது மனைவியே கொலை செய்தது அம்பலமானது.

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே நடராஜ் நகரில் வசித்து வரும் பைனான்சியர் இளங்கோவன். கடந்த வெள்ளிக்கிழமை 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார் தற்போது அதை வெளியிட்டுள்ளனர். அதில் இரு சக்கர வாகனத்தில் வரும் 6 பேர் கொண்ட மர்ம கும்பல், இளங்கோவன் வீட்டை நோக்கி பயங்கர ஆயுதங்களுடன் வருகின்றனர்.

    மூவரும் உடலுறவு... போதையில் தடுமாறி விழுந்து மரணித்த மாடல் அழகி- மவுனம் கலைத்த ஜான்சன்மூவரும் உடலுறவு... போதையில் தடுமாறி விழுந்து மரணித்த மாடல் அழகி- மவுனம் கலைத்த ஜான்சன்

    கேட்டை மூட முயற்சி

    கேட்டை மூட முயற்சி

    அப்போது தன்னை நோக்கி வருவதை அறிந்த இளங்கோவன் வீட்டின் முன்னிருந்த கிரில் கேட்டை மூட முயற்சிக்கிறார். ஒரு பாதி கேட்டை மூடும் போது மறுபாதி கேட் வழியாக ஒருவர் உள்ளே நுழைக்கிறார். அப்படியே இளங்கோவனை இழுத்து போட்டு வெட்டுகிறார். உடனே மற்ற 5 பேரும் அவரை நோக்கி வந்து சரமாரியாக வெட்டி விட்டு இளங்கோவன் உயிரிழந்ததை அறிந்தவுடன் தப்பிவிடுகின்றனர்.

    இரண்டாவது திருமணம்

    இரண்டாவது திருமணம்

    காவல்துறை நடத்திய விசாரணையில் தத்தநேரியை சேர்ந்த இவரது மனைவி இறந்து போன பின்னர் அதே பகுதியை சேர்ந்த அபிராமியுடன் இளங்கோவனுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையடுத்து கணவரை பிரிந்த அபிராமியை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் இளங்கோவன்.

    மூத்த மகளிடம் சில்மிஷம்

    மூத்த மகளிடம் சில்மிஷம்

    இதையடுத்து அபிராமி, அவரது 3 பெண்களையும் அழைத்துக் கொண்டு அலங்காநல்லூரில் உள்ள நடராஜ் நகரில் உள்ள வீட்டிலேயே தங்க வைத்திருந்தார். இந்த நிலையில் அபிராமியின் மூத்த மகள் அனுசுயாவுடன் இளங்கோவன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

    தாயிடம் அழுத மகள்

    தாயிடம் அழுத மகள்

    இந்த நிலையில் அனுசுயா காதல் திருமணம் செய்து கொண்டு மதுரைக்கு சென்றுவிட்டார். ஆனால் விடாமல் அங்கும் வந்து அனுசுயாவுக்கு இளங்கோவன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது தாய் அபிராமியிடம் அனுசுயா தெரிவித்துள்ளார்.

    கூலிப்படையினரை தேடும் போலீஸ்

    கூலிப்படையினரை தேடும் போலீஸ்

    இதனால் ஆத்திரம் அடைந்த அபிராமி கூலிப்படையினரை ஏவி இளங்கோவனை கொலை செய்துள்ளார். இதையடுத்து அபிராமி, அனுசுயா ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர் தப்பியோடிய கூலிப்படை கும்பலை தேடி வருகின்றனர்.

    English summary
    Wife and step daughter were arrested in Alanganallur Financier murder case as he gave sexual torture to his step daughter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X