25 வருட அரசியல் அனுபவமிக்கவர் சசிகலா.. சிறையில் இருந்து வெளியில் வரும்போது,.. கருணாஸ் பரபர பேட்டி
மதுரை: சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் சலசலப்பு இருக்கும் என்றும், அதிமுகவில் அவர் இடம் பெறுவது குறித்து கருத்து சொல்ல இயலாது என்றும் கருணாஸ் எம்எல்ஏ கூறினார்.
சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலையாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா வெளியே வந்தால் மீண்டும் அதிமுக தலைமையை கைப்பற்றுவாரா அல்லது அதிமுகவில் இணைவாரா என்றொல்லாம் பரபரப்புகள் கிளம்பி உள்ளன. சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் பலரும் அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில் திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் இதுபற்றி கூறும் போது, 25 வருட அரசியல் அனுபவமிக்கவர் சசிகலா, சிறையில் இருந்து வெளியில் வரும்போது, அதிமுகவில் நிச்சயம் சலசலப்பு இருக்கும். அதிமுகவில் சசிகலா இடம் பெறுவது குறித்து கருத்து சொல்ல இயலாது என்றார்.
ரூ 10 கோடி அபராதம் தானே.. அதெல்லாம் ஒரு மணி நேரத்தில் கட்டிடலாம்.. சசிகலா வழக்கறிஞர்
முன்னதாக தென்மாவட்டங்களில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் வகையில், போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தென்மண்டல ஐஜி முருகனிடம் கருணாஸ் புகார் மனு அளித்தார்.