மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராத்திரி நேரத்தில்.. காய் வாங்க கடைக்கு போன உமாதேவி.. கழுத்து அறுபட்ட நிலையில் மொட்டப் பாறையில்!

காய்கறி வாங்க சென்ற பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்

Google Oneindia Tamil News

மதுரை: காய்கறி வாங்க கடைக்கு போன உசிலம்பட்டி உமாதேவியை.. யாரோ கழுத்து அறுத்து பாறை மேல் போட்டு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் திராவிடமணி. இவரது மனைவி உமாதேவி. 45 வயதாகிறது. திராவிட மணி 20 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

Woman murdered near Usilampatti

இதனால், பிழைப்புக்காக உசிலம்பட்டி மார்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் உமாதேவி காய்கறி வாங்கி வருவதாகவும், காலையில் வந்துவிடுவேன் என்றும் வீட்டில் சொல்லிவிட்டு நேற்றிரவு கிளம்பி சென்றிருக்கிறார்.

ஆனால் இன்று காலை திரும்பி வரவே இல்லை. இதனால் வீட்டில் உள்ளவர்கள் அவரை தேடி வந்த நிலையில், மொட்டப்பாறை என்ற இடத்திற்கு அருகே பாறைகள் நிறைந்த முட்புதரில் ஒரு பெண் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதுக்கு எதுக்கு இவங்க கவலைப்படறாங்க.. இதுதான் என் பதில்.. எச். ராஜா பொளேர்அதுக்கு எதுக்கு இவங்க கவலைப்படறாங்க.. இதுதான் என் பதில்.. எச். ராஜா பொளேர்

இதையடுத்து விரைந்து சென்று பார்த்ததில், அது காய்கறி வாங்க போன உமாதேவி என்பதுதான் தெரியவந்தது. உமாதேவியின் உடம்பெல்லாம் காயமாக இருந்தது. பாறையின் மேல் பிணமாக கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உமாதேவியை யார் கொலை செய்தார்கள், எதற்காக கொன்றார்கள், என்று தெரியவில்லை. கழுத்தை அறுத்து கொல்லும் அளவிற்கு அவருக்கு விரோதிகள் யார் என்றெல்லாம் தெரியாத நிலையில், உத்தப்பநாயக்கனூர் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

English summary
45 year old woman murdered near Usilampatti and police investigation is going on this case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X