மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் இறுதி மரியாதை

Google Oneindia Tamil News

மதுரை: சீனாவுடனான மோதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் ஆட்சியர் வினய், எம்.பி. சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

லடாக் எல்லையில் சீனாவின் தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனியும் ஒருவர்.

ஜூன் 3இல் பிறந்தநாள்.. ஜூன் 6-இல் திருமண நாள்.. புதுவீட்டில் வசிக்க விரும்பிய பழனி.. மனைவி உருக்கம்ஜூன் 3இல் பிறந்தநாள்.. ஜூன் 6-இல் திருமண நாள்.. புதுவீட்டில் வசிக்க விரும்பிய பழனி.. மனைவி உருக்கம்

Wreath laying ceremony of Hawaldar K Palani

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் உடல் புதன்கிழமை இரவு மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. மதுரை விமான நிலையத்துக்கு ராணுவ விமானம் மூலம் பழனியின் உடல் கொண்டு வரப்பட்டது.

Wreath laying ceremony of Hawaldar K Palani

மதுரை விமான நிலையத்தில் ஆட்சியர் வினய், எம்.பி. சு. வெங்கடேசன், எம்.எல்.ஏ. சரவணன் உள்ளிட்டோர் இறுதி மரியாதை செலுத்தினர். இதன்பின்னர் ராணுவ வீரர் பழனியின் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூருக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.

Recommended Video

    நாட்டுக்காக உயிரிழந்தது பெருமை... தமிழக வீரரின் தாய் உருக்கம்!
    Wreath laying ceremony of Hawaldar K Palani
    English summary
    Wreath laying ceremony of Hawaldar K Palani who lost his life in GalwanValley clash, performed at Madurai Airport.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X