மதுரையில் பயங்கரம்.. காவல் ஆணையாளர் அலுவலகம் அருகே இளைஞரை வெட்டிக் கொன்ற கும்பல்
Recommended Video
மதுரை: மதுரை காவல் ஆணையாளர் அலுவலகம் செல்லும் சாலையில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் மர்ம நபர்கள் விரட்டி விரட்டி இளைஞரை கொன்ற சம்பவத்தை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கொலை செய்துவிட்டு தப்பியோடி மர்ம நபர்களில் ஒருவரை போலீஸ் அதிகாரி கொலை நடந்த இடத்திலேயே மடக்கிபிடித்தார்.
மதுரை மாவட்டம் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் இவருக்கு வயது 22. இவர் அதே பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் இன்று காலை புதூர் பேருந்து நிலையம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அந்த வழியில் இருசக்கர வாகனத்தில் 7 நபர்கள் வந்தனர்.அவர்கள் ஆறுமுகத்தை பயங்கரமான ஆயுதங்களை கொண்டு சரமாரியாக வெட்டத் தொடங்கினர். இதனால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இருசக்கர வாகனத்தில் வந்து படுகொலை செய்த மூன்று நபர்களில் பாலமுருகன் என்பவரை கொலை நடந்த சம்பவ இடத்திலேயே மதுரை போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் மடக்கிப் பிடித்தார். பிடிபட்ட பாலமுருகனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கிருந்து தப்பி ஓடிய நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சாமியாருடன் படுத்தா பணக்காரனாகலாம்... கட்டாயப்படுத்திய கணவன் மறுத்த மனைவி கொலை
சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி காட்சிகள் வைத்து விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட ஆறுமுகம் என்பவர் மீது செல்போன் திருட்டு, பயங்கர ஆயுதங்கள் வைத்திருத்தல்,என 4 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.மக்கள் அதிகமாக இருக்கும் பேருந்து நிலையம் பகுதியில் பட்டப்பகலில் இந்த படுகொலை சம்பவம் நடந்ததால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.