மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுரை விமானநிலைய சாலையில் பைக்கை அதிவேகமாக ஓட்டி வந்த இளைஞர்கள்.. நடந்த துயரம்

Google Oneindia Tamil News

மதுரை: மதுரை விமானநிலைய சாலையில் பைக்கை அதிவேகமாக ஓட்டி வந்து அரசு பேருந்தின் மீது மோதி இளைஞர் ஒருவர் விபத்தை ஏற்படுத்தினர். இந்தவிபத்தில் சிக்கி காயம் அடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Recommended Video

    மதுரை: ஜெட் வேகத்தில்... பைக்கில் வந்த இளைஞர்கள்... அரசு பேருந்து மீது மோதி விபத்து... ஒருவர் பலி!

    மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த ராம்குமார், கௌதம் இவர்கள் இருவரும் பெருங்குடியிலிருந்து டூவிலரில் வந்து கொண்டிருந்தனர். டூவீலரை கௌதம்(19) இயக்கிவந்தார். வாகனத்தின் பின்னால் ராம்குமார்(20) அமர்ந்து வந்தார்.

    Youth killed, one injured in two wheeler accident in Madurai

    பைக்கினை கெளதம் அதிவேகமாக ஒட்டி வந்துகொண்டிருந்த போது வாகனம் வெள்ளைக்கல் அருகே உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த சாலை தடுப்பை கடக்க முற்பட்ட போது, பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து காரியப்பட்டி சென்ற அரசு பேருந்தை கடக்க முயன்றது.

    தன்னுடன் பழகிய பெண்ணின் ஆபாச வீடியோக்களை.. சென்னை இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்!தன்னுடன் பழகிய பெண்ணின் ஆபாச வீடியோக்களை.. சென்னை இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்!

    டூவிலரின் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கௌதம் பேருந்தின் முன்பக்கத்தில் மோதினார். பைக் வேகமாக மோதியதில் தலைக்கவசம் அணியாமல் இருந்த ராம்குமார் மற்றும் கெளதம் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

    பலத்த காயமடைந்த இருவரும், மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்த நிலையில், இன்று ராம்குமார்(20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாலை பாதுகாப்பு வாரத்தின் இறுதி நாளில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Youth killed, one injured in two wheeler and bus accident in airport road in Madurai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X