கர்நாடகத்தில் 28 பேரின் உயிரைக் குடித்த கோரமான பஸ் விபத்து.. குமாரசாமி இரங்கல்
Recommended Video
மாண்டியா: கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் நடந்த கோரமான பஸ் விபத்தில் 28 பேர் பலியாகியுள்ளனர். இந்தக் கோரமான விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு முதல்வர் குமாரசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 3 பேர் குழந்தைகள் ஆவர். பாண்டவ்பூர் என்ற இடத்திலிருந்து மாண்டியாவுக்கு ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது கனகனமாரள்ளி என்ற இடத்தில் பேருந்து வந்தபோது திடீரென தாறுமாறாக ஓடி அருகில் இருந்த கால்வாயில் விழுந்தது.
இந்த கோரமான விபத்தில் 28 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தாமதமாக நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் உடனடியாக பஸ்ஸை நீரிலிருந்து வெளியே எடுக்காமல் கால தாமதம் செய்ததே உயிர்ப்பலி அதிகமாக காரணம் என்றும் கூறப்படுகிறது.
பலிாயன 28 பேரில் 10க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது வேதனையானது. சம்பவம் நடந்த இடத்தை முதல்வர் குமாரசாமி நேரில் வந்து பார்வையிட்டார். பின்னர் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்தார்.
விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.