விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் ‘மனித பல்’.. விமானப் பயணிகள் அதிர்ச்சி.. விசாரணைக்கு உத்தரவு!
விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் மனித பல் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெல்போர்ன்: ஆஸ்திரேலியா சென்ற விமானத்தில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் மனித பல் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று, கடந்த வாரம் பிப்ரவரி 27ம் தேதி, நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.
அப்போது விமானத்தில் இருந்த பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. அதில், பிராட்லி பெத்தான் என்ற பயணியின் உணவில் கல் போன்ற ஏதோ ஒன்று வாயில் அகப்பட்டுள்ளது. கல்லாக இருக்கும் என அதனை எடுத்துப் பார்த்தவர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அது ஒரு மனிதப் பல்.
உடனடியாக இது தொடர்பாக விமான ஊழியர்களிடம் பிராட்லி புகார் அளித்தார். தங்களது தவறை ஒப்புக்கொண்ட விமான நிறுவனம், பிராட்லியிடம் மன்னிப்பு கோரியது.
புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஈகோன்னா அது எதுக்குங்க.. நடிகை நீலிமா பொளேர் கேள்வி
மேலும் அவருக்கு இழப்பீடாக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் 75 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.5 ஆயிரம்) மதிப்பிலான இலவச கூப்பனை வழங்கியுள்ளது.
ஆனபோதும், விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் எப்படி மனித பல் வந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் விமானப் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.