For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓரின சேர்க்கை கொடூரத்திற்கு சிறுவன் பலி : ஆம்பள புள்ளைங்களையும் பத்திரமா பாத்துக்கங்க

ஓரினச் சேர்க்கைக்கு ஒன்பது சிறுவன் பலியான சம்பவம் திருநெல்வேலியில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. 19 வயது வாலிபனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: ஆறு வயது சிறுமி முதல் 60 வயது மூத்த பெண்மணிகள் வரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி பலியாகின்றனர். பெண் குழந்தைகளுக்குத்தான் பாதுகாப்பு இல்லை என்று கூறப்பட்ட நிலையில் சிறுவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தமிழகத்தில் உருவாக்கியுள்ளது. ஓரின சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்த சிறுவனை கொன்று வீசியுள்ளான் ஒரு கொடூரன். பெற்றோர் அளித்த புகாரின் பேரின் அவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கொலையான சிறுவன் பெயர் கொம்பையா என்பதாகும். ஒன்பது வயதாகும் இந்த சிறுவன் நெல்லை மாவட்டம் தாழையூத்தை அடுத்த குறிச்சி குளத்தை சேர்ந்தவன். டிக் டாக் வீடியோவில் பேசி கிராமம் முழுவதும் கொம்பையா பிரபலமானான்.

ஞாயிறு கிழமை விளையாட போன சிறுவன் வீடு திரும்பவில்லை. பெற்றோர் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து தாழையூத்து போலீசில் புகார் அளித்து விட்டு உறவினர்கள் வீடுகளில் தேடி வந்தனர்.

காவல்துறையினர் சிறுவன் மாயமானதாக வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். அப்போது பசுவை தேடி போன ஒருவரின் கண்ணில் முட்புதரில் சிறுவனின் உடல் தென்பட்டது. செவ்வாய்கிழமையன்று குறிச்சிக்குளம் கிராமத்திற்கு அருகே நான்கு வழிச்சாலை அருகே புதரில் இருந்து சிறுவனின் உடலை போலீசார் மீட்டனர்.

கள்ளக்காதலனுக்காக கணவனைக் கொல்ல ஸ்கெட்ச் போட்ட பிரியா... அப்புறம் நடந்தது திடீர் திருப்பம் கள்ளக்காதலனுக்காக கணவனைக் கொல்ல ஸ்கெட்ச் போட்ட பிரியா... அப்புறம் நடந்தது திடீர் திருப்பம்

பாலியல் துன்புறுத்தல்

பாலியல் துன்புறுத்தல்

சிறுவனின் தலையில் கல்லால் தாக்கப்பட்ட காயமும், கால்சட்டை இல்லாத நிலையில் அவனது மர்ம உறுப்பில் காயங்களும் தென்பட்டது. பாலியல் துன்புறுத்தல் செய்து சிறுவனை கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர்.

சிறுவனை கொன்றது ஏன்

சிறுவனை கொன்றது ஏன்

சிறுவன் ஞாயிறு கிழமையன்று மாயாண்டி என்பவனுடன்தான் விளையாடிக்கொண்டிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவனை பிடித்து காவல்துறையினர் கேட்ட போது, முதலில் மறுத்தான். தங்கள் பாணியில் விசாரித்த போது, சிறுவனை கொன்றதை ஒப்புக்கொண்டான். மாயாண்டி ஓரினச்சேர்க்கைக்காக சிறுவனை வற்புறுத்தியுள்ளான், அதற்கு சிறுவன் மறுத்துள்ளான்.

 சிறுவன் கொலை

சிறுவன் கொலை

கொம்பையா ஓரினச்சேர்க்கைக்கு மறுத்து அழுதுள்ளான். அதோடு பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கூறி விடுவதாகவும் தெரிவிக்கவே, ஆத்திரத்தில் அவனை அடித்து கீழே தள்ளி, தலையில் கல்லைப்போட்டு கொன்றதாக மாயாண்டி வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

பத்திரமாக பாத்துக்கங்க

பத்திரமாக பாத்துக்கங்க

காமப்பிசாசுகளிடம் சிக்கி சீரழிவது பெண் பிள்ளைகள் மட்டுமல்ல ஆண்பிள்ளைகளும்தான். வீட்டை விட்டு வெளியே விளையாடப்போகும் பிள்ளைகள் சில மணிநேரங்களில் திரும்ப வராவிட்டால் உடனடியாக தேடினால் மட்டுமே பத்திரமாக திரும்ப கிடைப்பார்கள், இல்லாவிட்டால் மாயாண்டி போன்ற காமப்பிசாசுகளின் கைகளில் சிக்கி இரையாகி விடுவார்கள். ஓரினச்சேர்க்கைக்காக கொலை செய்து விட்டு இப்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறான் மாயாண்டி

English summary
A 9 year boy found dead, who went missing from his house near Thalaiyuthu near Tirunelveli.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X