அரசியல் பரபரப்புக்கிடையே இன்று மும்பை தாக்குதல் 11-வது நினைவு தினம் அனுசரிப்பு #MumbaiTerrorAttack
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் பெரும் அரசியல் பரபரப்புக்கிடையே மும்பை தாக்குதலின் 11-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. மும்பையில் அமைக்கப்பட்டுள்ள 26/11 தாக்குதல் நினைவிடத்தில் ஆளுநர் கோஷ்யாரி, முதல்வர் பட்னாவிஸ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி கடல்வழியாக ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மிக கொடூரமான தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதல்களில் 166 பேர் உயிரிழந்தனர்.
கடல்வழியாக ஊடுருவிய 10 தீவிரவாதிகளில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் கைது செய்யப்பட்டார். அஜ்மல் கசாப்புக்கு 2012-ல் தூக்கு தண்டனையும் நிறைவேற்றப்பட்டது.
Mumbai: Maharashtra Chief Minister Devendra Fadnavis and Governor Bhagat Singh Koshyari pay tribute at Police Memorial at Marine Drive on 11th anniversary of 26/11 #MumbaiTerrorAttack, today pic.twitter.com/6czKcGvcy5
— ANI (@ANI) November 26, 2019
உலகையே உலுக்கிய இந்த தாக்குதலின் 11-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. மும்பையில் இத்தாக்குதலில் பலியானோர் நினைவாக அமைக்கப்பட்ட நினைவிடத்தில் மாநில ஆளுநர் கோஷ்யாரி, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.