மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கூட்டு பாலியல் பலாத்காரம்.. பிறந்த நாளில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. 4 பேர் மீது வழக்கு பதிவு

Google Oneindia Tamil News

மும்பை: பிறந்த நாள் அதுவுமா, 19 வயது இளம்பெண்ணை 4 பேர் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தையே அதிர வைத்துள்ளது.

அவுரங்காபாத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளம் பெண். இவருடைய தோழி மும்பையில் இருப்பதால், அங்கு வரும்படி சொல்லி இருந்தார். அதனால் அவரது அழைப்பை ஏற்று, அங்கு சென்றார்.

 19 year old Young Woman allegedly raped by 4 men on her birthday

கடந்த மாதம் 7 ம் தேதி இவருக்கு பிறந்த நாள் என்பதால், தோழியுடனே தங்கி இருந்து பிறந்த நாள் கேக்கையும் வெட்டி கொண்டாடினார். பர்த்டே பார்ட்டி முடிந்ததும், அங்கிருந்து அவுரங்காபாத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவரை 4 பேர் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். வீட்டுக்கு அழுது கொண்டே வந்த இளம்பெண் யாரிடமும் எதுவும் சொல்லவே இல்லை. ஆனால் அடிக்கடி அழுது கொண்டே இருந்திருக்கிறார்.

இந்த சமயத்தில் பிறப்புறுப்பில் அளவுக்கு அதிகமான வலி ஏற்பட்டு உள்ளது. இதனால் பெற்றோரிடம் வலியை பற்றி சொல்லவும், அவர்களும் ஆஸ்பத்திரிக்கு மகளை அழைத்து சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக பெற்றோரிடம் சொன்னார்கள். இதை கேட்டு அதிர்ந்த பெற்றோர், பெண்ணிடம் விசாரிக்கவும்தான் நடந்த சம்பவத்தை சொல்லி கதறினார்.

இதையடுத்து அவரது பெற்றோர் போலீசில் புகார் தந்தனர். ஆனால் அந்த 4 பேர் யார் என்றே தெரியவில்லை. ஒரு அடையாளமும், துப்பும் இல்லாமல் வழக்கு விசாரணை ஆரம்பமாகி உள்ளது. விரைவில் அவர்களை பிடித்து விடுவோம் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

English summary
19 year old Young Woman allegedly raped by 4 men on her birthday in Maharashtra and Police investigation is going on it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X