மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாரில் உறவு.. ரூமில் சடலம்.. விழுந்து கிடந்த வோட்கா பாட்டில்.. பெண் கொலையில் பரபரப்பு திருப்பம்

Google Oneindia Tamil News

மும்பை: "பாரில்தான் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.. இதையே சாக்காக வைத்து பணம் கறந்து கொண்டே இருந்தார்.. ஒரு கட்டத்தில் என் மனைவியிடம் சொல்லிவிடுவதாக மிரட்டினார்.. அந்த ஆத்திரத்தில்தான் கொன்றுவிட்டேன்" என்று பெண்ணை தலைகாணி வைத்து அமுக்கி கொன்ற நபர் வாக்குமூலம் தந்துள்ளார்.

மும்பை மாநகரத்தில் வசித்து வந்தவர் ரோசினா என்ற பெண்.. இவருக்கு வயது 33... போன டிசம்பர் 29-ம் தேதி இவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.. தன்னுடைய அறையிலேயே சடலமாக கிடந்த இவரை யார் கொன்றார்கள், எதற்காக கொன்றார்கள் என்று உடனடியாக தெரியவில்லை.

அதனால், போலீசார் விரைந்த வந்து அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் இருந்த பதிவுகளை கொண்டு ஆய்வு செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு நபர் சிக்கினார்.. ஆனால் அவரிடம் நடத்திய விசாரணையில் போதிய தகவல்கள், ஆதாரங்கள் எதுவுமே கிடைக்கவில்லை.. அதனால் அவரை விடுவித்து விட்டனர்.

என் அம்மா கூட போக மாட்டேன்.. நித்தியானந்தாவுடன் தான் இருப்பேன்.. பல் டாக்டர் ஹைகோர்ட்டில் விளக்கம் என் அம்மா கூட போக மாட்டேன்.. நித்தியானந்தாவுடன் தான் இருப்பேன்.. பல் டாக்டர் ஹைகோர்ட்டில் விளக்கம்

போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம்

இந்த சமயத்தில்தான், ரோசினாவின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது.. ஆனால், அதிலும் ரோசினாவை கொலை செய்யப்பட்டதற்கு எந்த ஒரு துப்பும் ஆதாரமும் கிடைக்கவில்லை.. அதனால் திணறிய போலீசார் திரும்பவும் ரோசினா சடலமாக கிடந்த அறைக்குள்ளேயே சோதனை செய்தனர்.

மதுபாட்டில்

மதுபாட்டில்

அப்போது அங்கே ஒரு மதுபாட்டில் விழுந்து கிடந்தது.. அந்த ஒரு பாட்டிலை தவிர வேறு எதுவுமே அறையில் கிடைக்கவில்லை. .அதனால், அந்த பாட்டிலை எடுத்துகொண்டு, மதுபானம் விற்பனை செய்யப்பட்ட கடைக்கு சென்று விசாரித்தனர்.. மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமிராக்களையும் ஆய்வு செய்தனர்.

ஒயின் ஷாப்

ஒயின் ஷாப்

அப்போதுதான், ஏற்கனவே போதிய ஆதாரம் இல்லாமல் விடுவிக்கப்பட்ட, அதே நபர் ஒயின்ஷாப்பிற்கு வந்து செல்வது பதிவாகி இருந்தது. அதனால் திரும்பவும் அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது பல திடுக் தகவல்கள் வெளியாயின.

மிரட்டல்

மிரட்டல்

அவர் பெயர் ஸ்வாபன்தாஸ்.. கொல்கத்தாவை சேர்ந்தவர்.. ரோசினாவுடன் ஒரு பாரில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. நாளடைவில் தகாத உறவும் ஆரம்பமாகி உள்ளது.. இவரிடமிருந்து ரோசினா இதையே சாக்காக வைத்து பணம் கறக்க ஆரம்பித்துள்ளார்.. ஆரம்பத்தில் கேட்ட பணத்தை தந்துவந்த ஸ்வாபன்தாஸ், நாளடைவில் பணம் தருவதை நிறுத்திவிட்டதாக தெரிகிறது.

வாக்குமூலம்

வாக்குமூலம்

இதனால் கடுப்பான ரோசினா, கள்ளஉறவு அவரது மனைவியிடம் சொல்லிவிடுவதாக மிரட்டி உள்ளார்.. இந்த ஆத்திரத்தில்தான் ஸ்வாபன்தாஸ் சம்பவத்தன்று ரோசினா அறைக்கு சென்று, தலைகாணியை முகத்தில் வைத்து அமுக்கி கொலை செய்துள்ளார்.. இந்த வாக்குமூலத்தை அடுத்து ஸ்வாபன்தாஸை போலீசார் கைது செய்துள்ளனர்.. இந்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
man arrested in 33 year old woman murder case in mumbai city
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X