மகாராஷ்டிராவை மீண்டும் உலுக்கும் கொரோனா.. பொது மக்கள் மட்டுமல்ல.. 4 அமைச்சர்களுக்கும் பாதிப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் மீண்டும் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, மும்பை, நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் அதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
வியாழக்கிழமை நேற்று ஒரே நாளில் மகாராஷ்டிராவில் 5 ஆயிரத்து 427 புதிய கொரோனா நோய் தொற்று பதிவாகியுள்ளது. 38 பேர் மரணம் அடைந்துள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்தான் மும்பையில் மறுபடி லாக் டவுன் கொண்டு வரலாமா என்பது பற்றி மேயர் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
பொதுமக்களுக்கு மட்டும் கிடையாது, அமைச்சர்களும் கொரோனா நோய் தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் அனில் தேஷ்முக் ராஜேந்திர சிங்னே உட்பட நான்கு அமைச்சர்கள் இந்த மாதத்தில் நோய்தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.
Comments
English summary
Corona virus spreading in Maharashtra like anything, as 4 state ministers have been affected with virus.
Story first published: Friday, February 19, 2021, 15:00 [IST]