மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிதிலமடைந்த 4 மாடி குடியிருப்பு.. விடுபட்ட பொருட்களை எடுக்கும் போது சரிந்த சோகம் .. 2 பேர் பலி

Google Oneindia Tamil News

Recommended Video

    மகாராஷ்டிர மாநிலத்தில் சிதிலமடைந்த 4 மாடி குடியிருப்பு-வீடியோ

    மும்பை: மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டியில் 4 அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகிவிட்டனர்.

    பிவாண்டியில் 8 வருட பழமையான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 4 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில் 20-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    4 storey building collapses in Maharastra

    அந்த குடியிருப்பு சிதிலமடைந்து விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இது எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் அங்கிருப்போரை நகர நிர்வாகம் காலி செய்யுமாறு கூறிவிட்டது.

    இதையடுத்து அந்த கட்டடம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் 22 குடும்பத்தினரை நேற்று இரவு நகர நிர்வாகத்தினர் வெளியேற்றினர். எனினும் சிலர் வீட்டுக்குள் இருக்கும் பொருட்களை எடுப்பதற்காக இரவு அந்த கட்டடத்துக்கு சென்றனர்.

    அப்போது அந்த கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்கு 4 அல்லது 5 பேர் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

    அதில் இருவரது சடலங்களை மீட்டனர். மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

    English summary
    Two people were killed in Maharastra's Bhiwandi after 4 storey building collapsed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X