ஆசை ஆசையாய்.. லாட்ஜில் ரூம் போட்ட 61 வயசு தாத்தா.. 40 வயது பெண்ணின் திடீர் அலறல்.. என்னாச்சு?
லாட்ஜ் ரூமில் 61 வயது முதியவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்
மும்பை: 61 வயசு தாத்தாவுக்கு இதெல்லாம் தேவையா.. லாட்ஜில் ரூம் எடுத்து அட்டகாசம் செய்துள்ளார்.. கடைசியில் என்னாச்சுன்னு பாருங்க..!
நாளுக்கு நாள் வன்முறைகள் வடமாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையில், பாலியல் கொடுமைகளும் உயர்ந்து கொண்டே வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் குர்லா என்ற பகுதி உள்ளது.. இங்குள்ள ஒரு லாட்ஜில், 61 வயது நபர் தங்கி உள்ளார்.. இவர் தன்னுடன் 40 வயது நடுத்தர வயது பெண்ணையும் ரூமுக்கு அழைத்து வந்துள்ளார்.
ஆண்களின் வழுக்கை தலையை கேலி செய்வதும் பாலியல் குற்றம்.. அதிரடியாக சொன்ன தீர்ப்பாயம்!
படபடப்பு
அந்த பெண் இவருடைய கள்ளக்காதலி என்று கூறப்படுகிறது.. இருவருமே ஒரே அறையில்தான் அன்றைய இரவு முழுவதும் தங்கி உள்ளனர்.. மறுநாள் காலை 10 மணி இருக்கும்.. அந்த பெண், லாட்ஜில் உள்ள ரிசப்ஷனுக்கு ரூமுக்குள்ளிருந்தே போன் அடித்தார்.. தன்னுடன் தங்கியிருந்தவர் திடீரென மயங்கி விழுந்துவிட்டார்.. பேச்சுமூச்சு இல்லாமல் இருக்கிறார்.. உடனே வாங்க என்று படபடப்பு குரலில் சொல்லி உள்ளார்.
லாட்ஜ் ரூம்
இதனால் பதறிப்போன லாட்ஜ் ஊழியர்கள், ரூமுக்குள் சென்று பார்த்துள்ளனர்.. அந்த பெரியவர் உடம்பில் அசைவே இல்லை,.. எனவே, குர்லா போலீசாருக்கு லாட்ஜ் நிர்வாகம் தகவல் தந்தது.. அதன்படி, அவர்களும் விரைந்து சென்று, முதியவரை மீட்டு, சயான் மருத்துவமனையில் அனுமதித்தனர்.. ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக சொன்னார்கள்... எனவே, முதியவருடன் தங்கிய பெண்ணை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
போஸ்ட் மார்ட்டம்
அப்போதுதான், அந்த பெரியவர் ஒர்லி பகுதியை சேர்ந்தவர் என்பதும், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.. இந்த பெண்ணுடன் ஜாலியாக இருப்பதற்காக இப்படி லாட்ஜில் ரூம் போட்டாராம்.. உடனே தண்ணி அடித்துள்ளார்.. அப்போதுதான் திடீரென்று மயங்கி விழுந்து விட்டார் என்று தெரியவந்துள்ளது.. இப்போதைக்கு பெரியவரின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வரவில்லை.. அது வந்தால்தான், தாத்தா எப்படி இறந்தார் என்ற உண்மை தெரியவரும்..
மாத்திரைகள்
திடீரென மாரடைப்பு வந்துவிட்டதா? அல்லது அளவுக்கு அதிகமாக தண்ணி அடித்துவிட்டாரா? ஏதேனும் மாத்திரை சாப்பிட்டாரா? மயங்கி விழுந்து இறந்துள்ளார் என்றால், ஏற்கனவே உடல்நலக்கோளாறில் பாதிக்கப்பட்டிருந்தவரா? என்ற காரணங்களை எல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.. 61 வயசு தாத்தாவுக்கு இதெல்லாம் தேவையா?!