மகாராஷ்டிரா கட்டிட விபத்து.. இடிபாடுகளில் சிக்கி 13 பேர் பலி.. 10 பேர் காயம்.. மீட்பு பணி தீவிரம்!
மும்பை: மகாராஷ்டிராவில் ராய்காட் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மகாராஷ்டிராவில் ராய்காட் மாவட்டத்தில் உள்ள மஹத் தேசில் பகுதியில் பெரிய கட்டிட விபத்து ஏற்பட்டது .5 மாடிகள் கொண்ட கட்டிடம் விழுந்து விபத்து ஏற்பட்டது.
35க்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கினார். கட்டிடத்தின் அடிப்பகுதியில் ஏற்பட்ட விரிசல் இந்த விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையின் மூன்று குழுக்கள் இரண்டாவது நாளாக இங்கு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
டெல்லி கலவரம்.. ஜேஎன்யூ மாணவர் சர்ஜீல் இமாம் உபா சட்டத்தின் கீழ் கைது.. தேச துரோக வழக்கு!
மகாராஷ்டிரா கட்டிட இடிபாட்டில் சிக்கி மொத்தமாக 13 பலியாகி உள்ளனர். 10 பேர் காயங்களுடன் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். இன்று 4 வயது குழந்தை ஒன்றும், 63 வயது மூதாட்டி ஒருவரும் மீட்கப்பட்டனர். இன்னும் மூன்று பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. இவர்களை காப்பாற்றும் வகையில் மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.