மகாராஷ்டிரா.. 5 மாடி கட்டிடம் இடிந்து கோர விபத்து.. ஒருவர் பலி.. இடிபாடுகளில் சிக்கிய 55 பேர்!
மும்பை: மகாராஷ்டிராவில் ராய்காட் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் பலியாகி உள்ளார்.
மகாராஷ்டிராவில் ராய்காட் மாவட்டத்தில் உள்ள மஹத் தேசில் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. மாலை 6.50 மணி அளவில் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
5 மாடிகள் கொண்ட கட்டிடம் ஆகும் இது. 75க்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கி இருக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. 30 பேர் இதுவரை காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் ஒருவர் பலியாகி உள்ளார்.
சோனியா காந்தி யார் மீதும் கோபத்தில் இல்லை.. மீட்டிங்கில் நடந்தது என்ன? காங். காரிய கமிட்டி விளக்கம்!
இன்னும் உள்ளே 55 பேர் வரை இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். கட்டிடத்தில் பலர் படுகாயங்களுடன், உயிருக்கு போராடியபடி சிக்கி இருக்க வாய்ப்புள்ளது.
இந்த கட்டிடத்தில் மொத்தம் 47 வீடுகள் இருந்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையின் மூன்று குழுக்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.