எவ்ளோ பாசம்.. சும்மா உட்காரு செல்லம்.. குழந்தையை கட்டியணைத்து கொஞ்சிய குரங்கு.. வீடியோவ பாருங்க!!
மும்பை: குரங்கு ஒன்று குழந்தையை அதன் தாயிடம் கூட விடாமல் கட்டியணைத்து கொஞ்சும் வீடியோ வைரலாகி வருகிறது.
பாசம் என்பது மனிதர்கள் மட்டுமின்றி உயிருள்ள அனைத்து ஜீவன்களுக்கும் உள்ள ஒரு உணர்வு. தங்களுக்கு பிடித்தவர்கள் மீது பாசம் வைப்பது என்பது மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பொருந்தும்
மனிதர்கள் செல்லப்பிராணிகளாக தங்களின் வீட்டில் நாய், பூனை, கிளி, போன்றவற்றை வளர்த்து வருகின்றனர். எந்த விலங்காக இருந்தாலும் நாம் காட்டும் அன்புக்கு நிச்சயம் அதற்கான பலனையும் பாசத்தையும் கொடுக்கும்.
குழந்தை மீது பாசம்
பாசமாக வளர்த்த நாய் உரிமையாளருக்கு ஏதாவது ஒன்று என்றால் சாப்பிடாமல் கொள்ளாமல் அழுது குறைக்கும். இதே வேலையை பூனையும் செய்யும். அந்தளவுக்கு அவற்றுக்கு எஜமானர் மீது பாசம்.
இந்நிலையில் குரங்கு ஒன்று குழந்தையுடன் மிகவும் பாசத்துடன் நெருக்கமாக பழகி வருகிறது. குழந்தையுடன் குரங்கு நெருக்கமாக இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
தலையை கோதிவிட்டு
நடுத்தெருவில் ஆண் குழந்தையுடன் அமர்ந்துள்ள அந்த குரங்கு குழந்தையின் தலையில் பேண் பார்ப்பது, தலையை கோதி விடுவது என தனது குழந்தையை போல் பார்த்து வருகிறது.
கட்டிப்பிடித்து..
குழந்தை எழுந்து செல்ல முற்பாட்டாலும், எங்கே போற.. சும்மா உட்காரு என்பதை போல கையை பிடித்து இழுத்து குழந்தையை தன்னுடன் அமர வைக்கிறது. அதோடு அந்த குழந்தையின் தாய் குழந்தையை அழைத்தபோதும் விடாமல் குழந்தையை இறுக்கி கட்டியணைத்து கொண்டது அந்த குரங்கு.
பயப்படவில்லை
குரங்கை கண்டு அந்த குழந்தையும் பயப்படவில்லை. குரங்கிடம் உள்ள குழந்தையை பார்த்து தாயும் அச்சப்படவில்லை.
|
நடிகர் அனுபம் கெர்
குரங்கு குழந்தையிடம் பாசமாக இருப்பதை அவ்வழியாக போவோரும் வருவோரும் வேடிக்கை பார்த்து செல்கின்றனர். வைரலாகும் இந்த வீடியோவை நடிகர் அனுபம்கெர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.