மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கத்தி முனையில் பலாத்காரம் செய்ய வந்த இளைஞர்.. பெண் கூறிய ஒரு வார்த்தையை கேட்டு தலைதெறிக்க ஓட்டம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    தன்னை பலாத்காரம் செய்ய வந்தவனை ஓட விட்ட பெண்

    மும்பை: கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்ய வந்த இளைஞரிடம் சாதுர்யமாக பெண் கூறிய ஒரு வார்த்தையால் தலை தெறிக்க ஓடினார் இளைஞர்.

    மகாராஷ்டிர மாநிலம் அவுரங்கபாத் மாவட்டத்தில் ராஜ்நகரை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். இவர் கடந்த மார்ச் 25-ஆம் தேதி தனது 7 வயது மகளுடன் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது தன்னிடம் வெறும் 10 ரூபாய் மட்டுமே இருந்ததால் அவர் ஷேர் ஆட்டோவிற்காக காத்திருந்தார்.

    ஷானூர்மியா தர்கா நின்று கொண்டிருந்த போது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் கிஷோர் விலாஸ் (22) என்ற இளைஞர் வந்துள்ளார். இவர் முகுந்த்வாடி ராஜ்நகரை சேர்ந்தவர். அவர் அந்த பெண்ணையும் அவரது மகளையும் தனது பைக்கில் ஏறுமாறும் அவர்கள் விரும்பும் இடத்தில் இறக்குவதாகவும் கூறி ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார்.

    ஆட்சியாளர்களிடம் வீரத்தை காண்பிக்காமல் அப்பாவி முதியவரை அடித்தே கொன்ற வீராதி வீரர்கள் ஆட்சியாளர்களிடம் வீரத்தை காண்பிக்காமல் அப்பாவி முதியவரை அடித்தே கொன்ற வீராதி வீரர்கள்

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    அப்போது ஒதுக்குப்புறமான இடத்தில் வண்டியை நிறுத்திய அந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் செய்வதறியாமல் திகைத்தார்.

    ஓட்டம்

    ஓட்டம்

    உடனே அறிவுப்பூர்வமாக சிந்தித்த அந்த பெண் தான் ஒரு எய்ட்ஸ் நோயாளி என்று தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் தலைத்தெறிக்க ஓடினார்.

    தகவல்

    தகவல்

    பின்னர் காவல் நிலையத்துக்கு சென்ற அந்த பெண் பாலியல் பலாத்கார முயற்சி குறித்தும் தான் தப்பித்ததும் குறித்தும் புகார் அளித்தார். மேலும் அந்த இளைஞரின் அங்க அடையாளங்களையும் அவர் ஓட்டிக் கொண்டிருந்த டாட்டூ ஆகியவை குறித்தும் தகவல் அளித்தார்.

    குற்றச்செயல்

    குற்றச்செயல்

    இந்த தகவலின் பேரில் போலீஸார் அந்த இளைஞரை கைது செய்தனர். அப்போது அவரிடம் விசாரணை நடத்தியதில் அந்த இளைஞர் அவரது தந்தையை கொன்றுவிட்டு ஜாமீனில் வெளியே வந்ததும் பின்னர் குற்றச்செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    English summary
    A murder accused who was in bail tried to rape 29 years old lady but she escapes by claiming to be HIV patient.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X